நடிகர் பாலா படத்தில் சம்பள பிரச்சனை….

நடிகர் பாலா படத்தில் சம்பள பிரச்சனை….

அஜித்தின் தம்பியாக ‘வீரம்’ படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடம் பரவலான அறிமுகத் தைப் பெற்றவர் நடிகர் பாலா. தமிழில் குறைந்த படங்களே நடித்திருந்தாலும் பல மலை யாளப் படங்களில் நடித்து கேரளாவில் பரவலான அறிமுகத்தையும் அங்கீகாரத்தையும் பெற்றுள்ள இவர்,

மலையாளத்தில் கலாபம் தொடங்கி பிக் பி, ரிங் டோன்,காயம், ஹிட் லிஸ்ட், புலி முருகன், லூசிபர் போன்று சுமார் 50 படங்களில் நடித்து அழுத்தமாகத் தனது பங்களிப்பைப் பதிவு செய்து வைத்திருப்பவர். முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்து அவர்களது அன்பைப் பெ ற்றிருப்பவர்.

பல மலையாள சேனல்களின் போட்டி நிகழ்ச்சிகளுக்கு நடுவராக இருந்துள்ளவர்.

கிட்டத்தட்ட நான்காண்டுகள் எந்தப் படத்திலும் நடிக்காமலிருந்தவர், அனூப் இயக்கத் தி ல் ‘ஷபீக்கிண்டே சந்தோஷம் ‘ படத்தில் நடித்தார். சில தினங்களுக்கு முன் வெளியான இ ப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்று சூப்பர் ஹிட் ஆகி உள்ளது, .மம்முட்டி உட்பட பல ந டிகர்கள் பாலாவின் நடிப்பைப் பாராட்டி உள்ளனர் .இந்தப் படத்தைத் தயாரித்தவர் நடிகர் உண்ணி முகுந்தன். 

படம் நல்ல விலைக்கு வியாபாரமாகி , ரசிக ர்களிடம் கொண்டாடப் ப ட்ட பிறகும், படத் தி ல் நடித்த பாலாவுக்கு சம்பளம் எதுவும் தரப் படாமல் இழுத்த டித்த தாகத் தெரிகிறது. இத னைச் செய்தியாக பா லா வெளிக் கொண் டு வந்த போது,பாலா ரசி கர்களுக்கும் உண்ணி முகுந்தன் ரசிகர் களு க்கும் கருத்து மோத லில் தொடங்கி கை கலப்பு வரை சென்றுள்ள து. உண்ணி முகுந்தனின் செய்தியாளர் சந்திப்பில் பாலாவின் சம்பளப் பிரச்சினை பற்றி ரசிகர்கள் கேள்வி கேட்க, பெரும் பிரச்சனையாக ஆனது. 

இது பற்றிப் பாலா கூறும் போது உண்மை எப்போதும் உறங்காது என்றவர்,தனக்காகக் கு ரல் கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். விரைவில் நடிகர் பாலா தி ரைப்படம் ஒன்றை இயக்க இருக்கிறார். இது தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகிறது. அதற்கான பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டு வருகின்றன. இன்று கேரள அரசின் சி றந்த நடிகருக்கான ‘கோல்டன் அவார்ட் ‘என்கிற விருதைப் பாலா பெற்றுக் கொள்ள இரு க்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.