தமிழ் சினிமாவில் நான் இதுவரை பார்த்த திரைப்படங்களிலேயே மிகவும் அறிவுப்பூர்வமான திரைப்படம் ‘குதிரைவால்’

தமிழ் சினிமாவில் நான் இதுவரை பார்த்த திரைப்படங்களிலேயே மிகவும் அறிவுப்பூர்வ மான திரைப்படம் ‘குதிரைவால்’

தமிழ் சினிமாவில் நான் இதுவரை பார்த்த திரைப்படங்களிலேயே மிகவும் அறிவுப்பூர் வமான திரைப்படம் ‘குதிரைவால்’ – இயக்குநர் மிஷ்கின் பாராட்டு

இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘குதிரைவால்’. கலையரசன், அஞ்சலி பாட்டீல் ஆகி யோர் நடித்திருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர்கள் மனோஜ் லியோனல் ஜாசன் மற் றும் ஷ்யாம் சுந்தர் ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளனர்.

எழுத்தாளர் ராஜேஷ்குமார் கதை, திரைக்கதை, வசனத்தில் உருவாகியுள்ள இப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று பல விருதுகளை வென்றிருக்கும் நிலையில், நாளை (மார்ச் 18) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இப்படத்தை வெளியிட பல ஒடிடி நிறுவனங்கள் போட்டியிட்ட நிலையில், திரையரங்கில் மட்டுமே இப்படத்தை வெளியிடுவேன், என்பதில் இப்படத் தின் தயாரிப்பாளர்கள் விக் னே ஷ் சுந்தரேசன் ம ற்றும் பா.இரஞ்சித் உறுதியாக இருந்தார்கள். கார ணம், இப்படத்தை தி ரையரங்குகளில் பார்க்கும் போது இதுவரை இல்லாத ஒரு புதிய அனுபவத்தை ரசிகர்கள் அனுபவிக்க முடியும் என்ற நம்பி க்கை யால் தானாம். அப்படி ஒரு திரைப்படமாக உருவா கியுள்ள இப்படத்தின் மீது பெரும் எதி ர்ப்பார்ப்பு ஏற்பட்டிருப்பதோடு, சமீபத்தில் வெளி யான டிரைலர் எதிர்ப்பார்ப்பை அதிக் கரிக்கவும் செய்திருக்கிறது. இந்த நிலையில், ‘குதி ரைவால்’ படத்தின் சிறப்பு காட்சி சமீ பத்தில் திரையிடப்பட்டது. இதி ல் இயக்குநர்கள் மி ஷ்கின், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்று படம் பார்த்த தோடு, படத்தை வெகுவாக பாராட்டியுள்ளனர்.

இயக்குநர் மிஷ்கின் படம் குறித்து கூறுகையில், “தமிழ் சினிமாவில் நான் இதுவரை பார் த்த திரைப்படங்களிலேயே மிகவும் அறிவுப்பூர்வமான திரைப்படம் ‘குதிரைவால்’. ஒரு இயக்குநர் நான் நினைத்த அறிவுப்பூர்வமான விஷயங்களை திரைப்படமாக கொடுத்தி ருக்கும் முதல் திரைப்படம் இது தான். நான் உள்பட நினைத்ததை 10 சதவீதம் தான் பட த் தில் சொல்வோம். ஆனால், இந்த படத்தின் இயக்குநர்கள் தாங்கள் நினைத்ததை 100 சதவீ தம் முழுமையாக சொல்லியிருக்கிறார்கள். அதற்கு என் பாராட்டுகள். ஒரு சைக்கா லாஜி க்கல் பயணமாகவே இப்படம் இருந்தது.நான் படம் பார்க்கும் போது எனக்கு புதுவித உண ர்வை கொடுத்தது. 

இந்த படத்தை தயாரித்த இயக்குநர் பா.இரஞ்சித்து க்கு என் நன்றியும், பாராட்டும். இந்த படம் ஆங்கில ப் படத்துக்கு நிகராக இருக்கிறது. இந்த படத்தின் மே க்கிங் சிறப்பாக இரு க்கிறது. பெரிய பெரிய வி ருதுகள் வாங்குவதற்கு தமிழ் சினிமா வெ கு தூரத் தில் இல்லை மிக குறைவான தொலைவில் இருக் கிறது என்ப தற்கு இந்த படம் சிற ந்த உதாரணம். இந்த படத்தை மிக பொறுமையாக பார்க்க வேண்டு ம். இதுபோன்ற பட ங் களை பத்திரி கை யாளர்களிடம் சேர்க்க வேண்டும். இந்த படத்தை தயாரித்த இயக்குநர் பா.இரஞ்சித் மற்றும் யாழி பிலிம்ஸ் நிறுவனத்துக்கு மிகப்பெரிய தைரியம் வேண்டும். பா.இரஞ்சித் தயாரித்த படங்களிலேயே இது தான் மிகச்சிறந்த பட ம்.” என்றார். 

இயக்குநர் லோகேஷ் கனகரான் படம் குறித்து கூறுகையில், “மிகவும் பிரமிப்பான திரைப் படம். இப்படி ஒரு படத்தை நான் எதிர்ப்பார்க்கவில்லை. படத்தில் நடித்த நடிகர்கள் அவர் களின் நடிப்பு மற் றும் ஒளிப்பதிவு என அனைத்தும் மிக சிறப் பாக உள்ளது. ஒரு வித்தி யா சமான கதையம்சம் கொ ண்ட இந்த படம் ரசிகர்களுக்கு நிச்சயம் வித்தி யாசமான உணர் வை கொடுக்கும்.” என்றார். 

இந்த நிலையில், ‘குதிரைவால்’ படம் குறித்து இயக்குநர் பா.இ ரஞ்சித் கூறுகையில், “தமிழ் சினிமாவில் இது ஒரு புதிய ஆரம்பமாக இருக்கும். ற உலகில் இருந்து விலகி அக உலகி ற் குள் இருக்கும் ஒரு கலையை பற்றி குதிரைவால் படம் பேசி இருக்கிறது. கனவு, கனவு உ லகத்தில் இருக்கும் சுதந்திரம் பற்றி குதிரைவால் காட்சிப்படுத்தி உள்ளது.வழக்கமான ஹீரோ வில்லன் கதையாக இல்லாமல், பார்ப்பவர்கள் பர்சனலாக கனெக்ட் செய்து கொ ள்ள கூடிய அளவில் படம் இருக்கும். திரையரங்குகளில் குதிரைவால் படம் தரும் புதிய அனு பவம் பேசப்படும்.” என்று தெரிவித்துள்ளார்.