இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசிய தயாரிப்பாளர் ராஜன்,

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசிய தயாரிப்பாளர் ரா ஜன்,

“நடிகர் விஜய் மத்திய அரசை எதிர்த்துப் பேச பயப்படுகிறார்” – தயாரிப்பாளர் கே.ராஜன் கண்டனம்

 “நடிகர் விஜய் மத்திய அரசை எதிர்த்துப் பேச பயப்படுகிறார்” – தயாரிப்பாளர் கே.ராஜன் கண்டனம்

இயக்குநர் ருத்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ₹2000 திரைப்படத்தின் டிரெய்லர் வெளி யீட்டு விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நேற்று நடைபெற்றது.

புதுமுக நடிகர்களின் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் 2016-ம் ஆண்டு மேற்கொ ள்ள ப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பேசப்ப ட்டு ள்ளது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசிய தயாரிப்பாளர் ராஜ ன், “மணல் கொள்ளை, ஆணவக் கொலையை எதிர்த்து படம் எடுத்தால் சென்சார் பிரச்ச னை வருவது இயல்பானதுதான். ‘மெர்சல்’ படத்தில் ஜி.எஸ்.டி. தொடர்பாக சிறிய விமர்ச னத்தை முன் வைத்ததால் நடிகர் விஜய்க்கு 12 மணி நேரம் மன உளைச்சல் கொடுத்து வி ட்டார்கள்.

நெய்வேலியில் படப்பிடிப்பில் இருந்தவரை சென்னை அழைத்து வந்து விசாரித்தார்கள். அவர்களுடைய காரில் அழைத்துவரும்போது விஜயை என்ன என்ன செய்தார்களோ, அந் தப் படத்திற்கு பிறகு மத்திய அரசு பற்றி விஜய் விமர்சனமே செய்வதில்லை…விஜய் பய ந்து போய் விட்டார். ஏனென்றால் அவர் கோடீசுவரர். பணம் அதிகம் சேர்த்துள்ள வர்களு க்கு ஆண்மை போய்விடுகிறது. கொடுமையை எதிர்க்கும் தன்மை போய்விடும். எங்க ளைப் போன்ற ஏழைகள்தான் எதிர்த்து நிற்போம்.

நீதிமன்றக் காட்சியில் அம்பேத்கர் படத்தை பயன்படுத்தக்கூடாது என்று தணிக்கைக் கு ழு கூ றியதாக இயக்குநர் கூறினார். திருமாவளவன், சீமான், வேல்முருகனிடம் இது பற்றி கூறி போராட்டம் நடத்த வேண்டும். திரைப்படங்களில் தவறான வார்த்தைகளையே அனு மதிப்பவர்கள் அம்பேத்கர் படத்தையும், திருக்குறளையும் படத்தில் காட்டக் கூடாது.. சொ ல்லக் கூடாது என்று கூறுவது சரியா..?

பா.ஜ.க. திரைத்துறையினருக்கு எதிராக சட்டங்களை திருத்தி அக்கிரமம் செய்து வரு கிறது. காயத்ரி ரகுராம் போல தெருவில் திரிந்த பலருக்கு சினிமாக்காரர்கள் என்பதா லேயே பாஜகவில் பொறுப்பு தந்தார்கள். அது இப்போது வள்.. வள்… என குரைக்கிறது…” என்று காரமாகவே பேசினார் தயாரிப்பாளர் கே.ராஜன்.