தருமபுரி டாக்டர் வே.சரவணன் பெருமையுடன் வழங்கும் படம் ‘செவிலியர் கடவுள்’.

தருமபுரி டாக்டர் வே.சரவணன் பெருமையுடன் வழங்கும் படம் ‘செவிலியர் கடவுள்’.

இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் குணாஜீ எழுதி இயக்குகிறார். இவர் ‘ஜனநாயகக் கொ லை’, ‘திருப்பி அடி’ குறும்படங்களை இயக்கியவர்.

கொரோனா சமயத்தில் தங்கள் உயிரை துச்சமாக எண்ணி மக்கள் சேவை ஆற்றிய உலக செவிலியர்களை பெருமைப்படுத்தும் விதமாக இந்தப் படம் உருவாகவுள்ளது.

உலகத்திலேயே ஆகச் சிறந்த மருந்து ‘அன்பு’ என்பதுதான் படத்தின் மையக்கரு.

அதே சமயம் கொரோனாவை விட கொடியவர்கள் மனிதர்கள் என்பதையும், எல்லா மத ங்களும் அன்பை மட்டுமே போதிக்கிறது என்பதை கருத்தியல் படமாக இல்லாமல் கமர்ஷீயல் படமாக வெளிவர உள்ளது. கொரோனா சமயத்தில் குடும்பத்தை பிரிந்து பல மணி நேரம் கஷ்டமான கவச உடை அணிந்து சேவை ஆற்றிய செவிலியர்களின் கட மை யையும் தியாகத்தையும் அழுத்தமாக பதிவு செய்யவுள்ளார்கள்.

இதில் நாயகனாக விஷ்ணு ப்ரியன் நடிக்கிறார். இவர் ‘மை’, ‘மெர்லின்’, ‘இலக்கணம்’ ஆகி ய படங்களில் நடித்தவர். நாயகியாக வண்ணத்தமிழ் சூர்யா நடிக்கிறார். இவர் பிரபல க ல்லூரியில் பேராசிரியராக பணியாற்றியவர். இவர்களுடன் ‘திருப்பாச்சி’ பெஞ்சமின் மு க்கிய வேடத்தில் நடிக்கிறார். அனிஸ் சாலமன் இசை அமைக்கிறார். கார்த் திக் பாலா ஒ ளிப்பதிவு செய்கிறார். கணேஷ் எடிட்டிங்கை கவனிக்கிறார்.

படம் குறித்து இயக்குநர் குணாஜீ கூறியதாவது: “வெள்ளுடை தரித்த மானுட கடவுளான மருத்துவர்களையும், செவிலியர்களையும் இந்தப் படம் மேன்மைப்படுத்தும். ஒரு படை ப்பாளியாக இந்தப் படத்தை இயக்குவதில் பெருமைக் கொள்கிறேன்” என்றார்.