கோலாகலமாக துவங்கியிருக்கிறது “தி கிரேட் இந்தியன் கிச்சன்” தமிழ் பதிப்பு !

கோலாகலமாக துவங்கியிருக்கிறது “தி கிரேட் இந்தியன் கிச்சன்” தமிழ் பதிப்பு !

மலையாள மொழியில் வெளியாகி இந்தியாவெங்கும் அதிர்வலைகளை கிளப்பிய, “தி கி ரேட் இந்தியன் கிச்சன்” படம், இயக்குநர் R.கண்ணன் இயக்கத்தில் நாயகி ஐஸ்வர்யா ரா ஜேஷ் மற்றும் ராகுல் ரவிச்சந்திரன் நடிக்க தமிழில் உருவாகிறது. இயக்குநர் R.கண்ணன் அவர்களே தனது மசாலா பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்க இப்படத்தின் படப்பிடி ப்பு காரைக்குடியில் நடந்து வருகிறது. படத்தினை ஒரே கட்டமாக படமாக்ககியுள்ளார்கள்.

கனா, கா பெ ரணசிங்கம், என தரமான வெற்றிபடங்களில் அழுத்தமான கதாப்பாத்திரம் செய்து பாராட்டுக்கள் குவித்து வரும் ஐஷ்வர்யா ராஜேஷ் இப்படத்தின் முதன்மை பாத்தி ரத்தில் நடித்துள்ளார்.

படம் குறித்து நாயகி ஐஷ்வர்யா ராஜேஷ் கூறியதாவது…

பொதுவாக ஒரு படத்தை ரீமேக் செய்வது என்பது மிகக்கடினம். படத்தின் அடிப்படை ஆத் மாவை அப்படியே கொண்டு வருவது என்பது முடியாத காரியம் அதனால் நான் நிறைய ரீமேக் நடிக்க மறுத்திருக்கிறேன். ஆனால் இந்தப்படம் என்னை தேடி வந்த போது கண்டி ப்பாக செய்ய வேண்டும் என நினைத்தேன். இன்றைய சமூகத்திற்கு மிகவும் தேவையான கருத்து இப்படத்தில் இருக்கிறது. நான் கா பெ ரண்சிங்கம் படத்தில் நடித்துகொ ண்டி ருந் தபோது ஒரு சிறு பெண்ணை சந்தித்தேன் அவளக்கு எதுவும் சொல்லாமலேயே சிறு வய தில் திருமணம் செய்து வைக்கப்பட்டிருந்தது. இன்றும் பெண்ணின் உணர்வுகளுக்கு மதி ப் பளிக்கும் பழக்கம் நம் சமூகத்தில் இல்லை. கிராமம் நகரம் என அனைத்து இடங் களி லும் கண்டிப்பாக இப்படம் பார்க்கப்பட வேண்டும். இயக்குநர் R.கண்ணன் அவர்களுடன் எனக்கு முதல் படம் மிகச் சிறந்த இயக்குநர், அருமையான படக்குழு படப்பிடிப்பு அனு பவம் அ ற்புதமாக இருக்கிறது படமும் மிகச்சிறப்பாக வரும் என்றார்.

இயக்குநர் R.கண்ணன் படம் குறித்து கூறியதாவது….

நம் கலாச்சாரத்தில் பெண்கள் வாழ்வின் பெரும்பகுதியை சமையலறை ஆக்கிரமித் துள் ளது. இன்றைய நவநாகரீக உலகிலும் பெண்களின் அடிப்படை உணர்வுகளுக்கு எந்த மதி ப்பும் இருப்பதில்லை. இதையெல்லாம் முகத்தில் அறைந்தாற்போல், அருமையாக சொல் லியிருந்தது “தி கிரேட் இந்தியன் கிச்சன்” படம். பலர் இப்படத்தை தமிழில் இயக்க முயன் றார்கள் தரமான படங்களை இயக்கியிருந்ததால் என்னை நோக்கி இப்படம் வந்தது. நகர ங்களில் ஆர்டர் செய்து சாப்பிடும் ஃபாஸ்ட்புட் கலாச்சாரம் வளர்ந்திருக்கிறது ஆனால் கிராமங்களில் பெண்கள் எந்நேரமும் சமையலறையில் தான் இருக்கிறார்கள் அதனால் தான் கதை காரைக்குடியில் நடப்பதாக அமைத்தேன். ஒளிப்பதிவாளர்  பாலசுப்பிர மணி யம் காரைக்குடியை சேர்ந்தவர் என்பதால் படப்பிடிப்பு மிக எளிமையாக இருக்கிறது. பட த்தின் ஆன்மா கெடாமல் சமூகத்திற்கு தேவையானதை சொல்வதே குறிக்கோள் என்றார்.

இயக்குநர் R.கண்ணன் இப்படத்தினை இயக்குவதுடன் Masala Pix நிறுவனத்தின் சார்பில் M.K.R.P நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார்.

தொழில்நுட்ப குழுவினர் விபரம் 

தயாரிப்பு & இயக்கம் : R கண்ணன்,ஒளிப்பதிவு : பாலசுப்பிரமணியம் ,வசனம் : சவரிமு த்து & S.ஜீவிதா சுரேஷ்குமார். கலை இயக்கம் : ராஜ்குமார்,உடை வடிவமைப்பு : பிரதீபா பாண்டியன்,புரொடக்சன் எக்ஸிக்யூட்டிவ் : அய்யாபிள்ளை,எக்ஸிக்யூட்டிவ் புரொடியூசர் : ஓம்சரண்,மக்கள் தொடர்பு : ஜான்சன்