தமிழ் மொழியைப் பிரிப்பது எங்கள் அதிகாரத்தைப் பறிப்பது கவிஞர் வைரமுத்து ஆதங்கம்

தமிழ் மொழியைப் பிரிப்பது எங்கள் அதிகாரத்தைப் பறிப்பது கவிஞர் வைரமுத்து ஆதங்கம்.

தமிழ் மொழியைப் பிரிப்பது எங்கள் அதிகாரத்தைப் பறிப்பது கவிஞர் வைரமுத்து ஆதங்கம்.

“விதியே விதியே என்செய நினைத்தாய் தமிழச் சாதியை” என்ற பாரதி வரியைப் பாடிப் பாடி நெஞ்சுடைந்து நிற்கிறேன். கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 20 மாணவர்கள் விரும்பினால்தான் தமிழ் பயிற்றுவிக்கப்படும் என்றும், அதிலும் வாரத்தில் மூன்றே வகுப்புகள் என்றும், தமிழாசிரியர்கள் தற்காலிகமானவர்கள் என்றும் நடுவண் அரசு விதிகள் வகுத்திருப்பதைப் பார்த்துத்தான் ‘விதியே விதியே’ என்ற பாரதி பாடல் எனக்குள் வினைப்பட்டது. நாமிருப்பது உள்நாட்டிலா உகாண்டாவிலா என்ற வெட்கம் எங்கள் தலைமுடியை இழுத்துத் தலையைத் தின்கிறது.

இந்தியப் பிரதமர் உலகமெல்லாம் தமிழ் வரிகளை உச்சரிக் கிறார்; மகிழ்ச்சி; நன்றி. ஆனால், மேற்கோள்களால் மட்டுமே தமிழர்கள் மெய்சிலிரிக்க மாட்டார்கள்; செயல் வேண்டும். இ ந் தியாவின் தேசிய இனங்களின் எல்லாத் தாய்மொழி களை யும் உயர்த்திப் பிடிக்கும் உரிமை வேண்டும்.தா ய்மொழி யை  ஓர் இனத்தின் அடையாளம் என்றுதான் நினைத் திருந் தோம். ஆனால், மூளையின் மறுபக்கத்தால் யோசி த்தால் அது அ டையாளம் மட்டுமன்று அதிகாரம் என்பது புலனாகு ம். தமிழ்மொழியை எங்களை விட்டுப் பிரிப்பது அதிகார த்தை மெல்ல மெல்லப் பறிப்பது என்றே புத்திமான்களால் ரிந்துகொள்ளப்படும்.

உலகின் சரிபாதி மொழிகள் இந்த நூற்றாண்டில் இறந்துவி டும் என்ற ழிவிஞ்ஞானிகளின் எச்சரிக்கையிலிருந்து நா ங்கள் விழிப்பதற்குளே இப்படி எங்கள் விழிகளைப் டுங்கினால் எப்படி? இதை ஓர் எளிய செயலாக எடுத்துக்கொள்ள இயலாது. சமஸ்கிருதத்தைவிடத் தொ ன்மையானது என்று இந் தியப் பிரதமரால் கொண்டாடப்பட்டது தமிழ். ஆனால், சமஸ் கிருத வளர்ச்சிக்கு 600கோடி ஒதுக்கியபோது, அதனினும் தொன்மையான தமிழுக்கு ஒது க்கப்பட்டது எவ் வளவு என்பது நாடாளுமன்றத்திற்கு நினைவிருக்கிறதோ இல்லையோ நாட்டுக்கு நி னைவிருக்கிறது. நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்தி திணிக்கப்படுவது கண்டு எரி ந்த உடம்பில் இன்னும் எரியாதிருக்கும் எலும்புகள் மீண்டும் தீக்குளிக்க எத்தனிக்கின் றன.

பிரிட்டிஷ் தீவின் பழங்கலாசாரத்தை அழித்த ரோமானியக் கலாசாரத்தைப் போல், ஆஸ் திரேலியப் பழங்குடிகளின் மொழியை அழித்த ஆங்கில ஆதிக்கத்தைப்போல், சமஸ்கி ருதத்தால் இன்னும் அழிக்க முடியாத எங்கள் கலாசார எச்சங்களை இந்தித் திணிப்பின் மூலமாய் அழிக்கத் துடிப்பதைக் கண்டு எங்கள் கருவில் உள்ள பிள்ளையும் கண்ணுற ங் காது. தமிழ்நாட்டில் பெருந்தலைகள் இல்லை என்று தவறாகக் கருதாதீர்கள். அவர்கள் விதைத்த தத்துவங்கள் இந்த மண்ணில் இன்னும் சாகவில்லை. நாங்களும் கடந்த கால த்தில் சில பிழைகள் செய்திருக்கிறோம். ஆனால், அவையெல்லாம் எங்கள் தோல்விக ளால் நேர்ந்தவை. இப்போது நேர்பவை துரோகத்தால்.

இந்தியாவின் பூகோளம் செய்த துரோகத்தால் எங்கள் சரித்திரம் தண்டிக்கப்பட் டிருக் கிறது. போதும்! நாங்கள் பட்டழி ந்தது போதும்; கெட்டழிந்தது போதும்; இன்னும் எங் களை ச் சுட்டழிக்கப் பார்க்காதீர்கள். தமிழில் நம்பிக்கை இல்லாத – தமிழை எழுதவோ படிக்க வோ தெரியாத – ஏன் தமிழைப் பேச மறுக்கிற ஒரு தலைமுறை எங்கள் கண் முன்னால் நிற்பது கண்டு பனிக்காற்றின் தளிரைப்போல் எங்கள் இதயம் நடுங்குகிறது. தமிழுக்கு எதிரான திட்டங்களைக் கொண்டு வருவது – தமிழர்கள் எதிர்த்த பிறகு அதை மாற் றிக் கொள்வது என்ற நடைமுறை நல்லதல்ல. போராடும் பாம்பைக் கொத்தவிட்டுக் கொத் தவிட்டு அது களைத்துப்போன பிறகு அதன் கழுத்தைக் கவ்வும் கீரியைப்போல, தமிழ ர்களைக் களைக்க வைக்கும் முயற்சிகளுள் இதுவும் ஒன்றோ என்று எண்ணத் தோன் றுகிறது.

தமிழ் படிப்போரின் எண்ணிக்கை இருபதுக்கும் குறைவாகப் போவதற்குப் பெற்றோ ர்க ளும் ஒரு பெருங்காரணம் என்று கவலையுறுகிறோம். தமிழ்நாட்டுப் பெற்றோர்கள் தங்க ள் பிள்ளைகள் தமிழ் மொழியைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை ஓர் அறமா கவே கடைப்பிடிக்க வேண்டும். ஒரு தலையாய செய்தி சொல்கிறேன். “இனி எந்த மொழி தொ ழில்நுட்பத்தின் தோள்களில் ஏறித் தொண்டு செய்கிறதோ அந்த மொழிதான் நிலை க்கும். துருப்பிடித்த பழம்பெருமைகள் மட்டும் இனி ஒரு மொழியைத் தூக்கி நிறுத்த முடியாது. இன்று சர்வதேச சமூகம் மூன்று மொழிகளை முன்னிலைப்படுத்துகிறது. ஆங் கிலம் – சீனம் – ஜப்பான். இந்த மூன்று இனங்களுமே தொழில்நுட்பத்துக்குத் தங்கள் மொ ழியைக் கொம்பு சீவுகின்றன. தமிழுக்கும் அந்தத் தகுதி இருக்கிறது.

தமிழர்களுக்குத்தான் நம்பிக்கை வேண்டும்”. கேந்திரிய வித்யாலயா பள்ளி குறித்துச் சிந் திக்கும் இதே வேளையில் ‘தாய்மொழியும் தமிழ்நாடும்’ என்பது குறித்து ஒட்டுமொத்த அறி வுலகமும் கல்வி உலகமும் ஓர் உறுதிச் சிந்தனை மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசின் – மாநில அரசின் தடைகளைவிடத் தமிழர்கள் தங்களின் மனத்தடையை உடைத் தெறிய வேண்டும். அப்போதுதான் தமிழ்நாட்டு எல்லைக்குள் பிள்ளைகள் தமிழ் படிப்பா ர்கள். தமிழைப் பாடமாய் அல்ல பயிற்றுமொழியாய்ப் படிப்பவர்க்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்பது எழுதிய சட்டமாகவும் எழுதாத சட்டமாகவும் திகழ வேண்டும்.

இல் லையெனில் 50 ஆண்டுகளில் தமிழ் பேச்சு மொழியாகச் சுருங்கிப்போகும் விபத்து நேர்ந் தாலும் நேரும்; 3000 ஆண்டுகளாக எங்கள் முன்னோர்கள் சேர்த்துவைத்த ஞானச் செல் வங்கள் புதைத்த இடம் தெரியாத புதையலாய் மறைந்தொழியும். தமிழுக் கு எங்கே ஊறு நேர்ந்தாலும் அரசியல் – சாதி – மொழி – மதம் கடந்து தமிழ்நாட்டுக்குள் வாழும் எல் லா இனங்களும் ஒற்றைக் குரலாய் ஒலிக்க வேண்டும். ‘தமிழைக் காப்போம்; தமிழரை மீட்போம்’.