பிறந்தநாள் காணும் சினிமா விஐபி.கள்… மரக்கன்று நடவைத்து வாழ்த்தும் சேவையில்

பிறந்தநாள் காணும் சினிமா விஐபி.கள்… மரக்கன்று நடவைத்து வாழ்த்தும் சேவையில்

பிறந்தநாள் காணும் சினிமா விஐபி.கள்… மரக்கன்று நடவைத்து வாழ்த்தும் சேவையில் ‘பி.ஆர்.கே சினி பர்த்டே காலண்டர்’ ராயல் பிரபாகர்!

திரைப்பாடலாசிரியரும் நடிகரும் இயக்குநருமான பா.விஜய்க்கு 20.10.2020 அன்று பிறந்தநாள். அதையொட்டி, இயக்குநர் சுப்பிரமணிய சிவாவுடன் பா.விஜய்யை சந்தித்த ‘பி.ஆர்.கே சினி பர்த்டே காலண்டர்’ ராயல் பிரபாகர் மரக்கன்று வழங்கி வாழ்த்தினார்.

கடந்த 14 வருடங்களாக தொடர்ந்து, சினிமா துறையைச் சேர்ந்த பிரபலங்கள் மற்றும் சினிமா பத்திரிகையாளர்களின் பிறந்தநாளன்று அவர்களுக்கு வாழ்த்துச் செய்தி அனு ப்பி மகிழ்விப்பதை வழக்கமாக கொண்டிருக்கிற ராயல்பிரபாகர், தனது நற்பணியின் அடுத்த கட்டமாக, பிறந்த நாள் காண்பவரை நேரில் சந்தித்து மரக்கன்று வழங்கி – அதை அவர்களின் வசிப்பிடத்தில் அவர்களையே நட வைக்கிற சேவையைத் தொடங்கினார்.

இயக்குநர் சீனு ராமசாமி, இசையமைப்பாளர் அம்ரிஷ், நடிகர் ஆடுகளம் நரேன், நடிகர் பவன், இயக்குநர் விஜய்ஸ்ரீ ஜி என பலரையும் சந்தித்து மரக்கன்று நடவைத்த ராயல் பிரபாகர் தனது சேவையின் தொடர்ச்சியாக பா. விஜயை சந்தித்தார். ராயல் பிரபாகரின் சேவையை மனம் திறந்து பாராட்டிய விஜய் அவரது இல்லத்தில் மரக்கன்றை நட்டார். சந்திப்பை ஒருங்கிணைத்த இயக்குநர் சுப்பிரமணிய சிவாவுக்கு, ராயல் பிரபாகர் நன்றி தெரிவித்தார்.