நித்தம்’ புகைப்படக்கண்காட்சி:ஒரு மிகப்பெரிய வலியின் எழுச்சி- இயக்குனர் மிஷ்கின்

நித்தம்’ புகைப்படக்கண்காட்சி:ஒரு மிகப்பெரிய வலியின் எழுச்சி- இயக்குனர் மிஷ்கின்

இயக்குனர் பா.இரஞ்சித் தனது நீலம் பண்பாட்டு மையம் சார்பாக வானம் கலைத்திரு வி ழா, தலித் வரலாற்று மாத நிகழ்வாக ஏப்ரல் மாதம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத் திவருகிறார். இதில் பி.கே ரோசி திரைப்படவிழா, கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் இசை நிகழ்ச் சி, சமுக நீதியைப்பேசும் மேடை நாடகங்கள் ஆகியவை நடைபெற்றன.

இதனைத் தொடர்ந்து சென்னை அடையாரில் உள்ள டாக்டர். அம்பேத்கர் மணிமண்டப த்தில் கடந்த 17-ஆம் தேதி ’நித்தம்’ புகைப்படக்கண்காட்சி தொடங்கியது. இந்த புகைப் படக் கண்காட்சியில் எளிய மனிதர்களின் அன்றாட வாழ்க்கையை எடுத்துரைக்கும் பல் வேறு புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. 

இந்த நிலையில் நித்தம் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட இயக்குனர் மிஷ்கின் பேசியதாவது, “இது எனக்கு இதுவரையிலும் கிடைக்காத ஒரு பெ ரும் வாய்ப்பு. இங்கே வைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு புகைப்படமும் வலியினால், சோகத்தினால் உருவா ன கலைப்படைப்புகளாக தான் நான் பார்க்கிறேன். அனைத்து புகைப்படங்களும் ஆழ்ந்த உ ள்அர்த்தத் தோடு, மிக அற்புதமாக எடுக்கப்பட்டுள்ளது. ஒவ் வொ ரு புகைப்படமும் ஒரு ம னித அவலத்தின் சுமை யை சொல்கிறது. அனைத்து புகைப்படங்களும் ஒரு மிகப்பெரிய இனத்தின் வலியை சொல்கிறது.

இந்த கண்காட்சியில் இடம்பெற்றுள்ள அனைத்து புகை ப்படங்களுமே உலகின் எந்த பு கைப்பட கண்காட்சியில் இடம்பெற்றாலும் முதல் இடத்தை பிடிக்கும் அந்த அளவிற்கு அ வைகள் சிறப்பாக உள்ளன. இந்த புகைப்பட கண் காட்சியை ஒரு மிகப்பெரிய வலியின் எழுச்சியாக தான் நான் பார் க்கிறேன். இந்த கண் காட்சி பார்ப்பவர்ள் எல்லாருடைய இ தயத்தையும் தொடும். இந்த க ண்காட்சியில் தங்கள து புகைப்படங்களை வைத்துள்ள அ னைத்து புகைப்பட கலைஞர் களுக்கும் எனது வாழ்த் துக ளை தெரிவித்து க்கொள்கிறேன்.