தமிழக அரசுக்கு தங்கர் பச்சானின் உடனடி கோரிக்கை.

தமிழக அரசுக்கு தங்கர் பச்சானின் உடனடி கோரிக்கை.

நிலைமை கை மீறி சென்றுவிட்ட நிலையில் ஊரடங்கு என்பது தற்போதைய சூழலில் கட் டாயமான ஒன்றுதான். ஊரடங்கினாலோ அதை தொடர்ந்து நீடிப்பதினாலோ கொரோ னா இரண்டாம் அலையிலிருந்து மீண்டுவிட முடியாது. ஆக்ஸிஜனை உற்பத்தி செய்து தரு வதினாலோ நோயாளிகளுக்கான படுக்கை எண்ணிக்கைகளை மேலும் மேலும் அதிகப்ப டுத்துவதினாலோ இழப்பிலிருந்து முழுமையாக மீள முடியாது.நிலைமையின் தீவிரத்தை தொலைநோக்கு பார்வைகொண்டு உணராமல் கட்டமைப்புகளை உருவாக்காமல் போ னதன் விளைவே இத்தகைய நிலைமைக்குக்காரணம்.

சோதனை செய்துகொள்ளவே தயங்கும் இம்மக்கள் சோதனை செய்து கொண்டாலும் இர ண்டு நாட்கள் கழித்தே மருத்துவ அறிக்கையை தெரிவிக்கின்றனர்.அதற்குள் தொற்று தீ விரமாகி நுரையீரலுக்குள் சென்று பாதிப்பை ஏற்படுத்தி விடுகின்றது.நோய் தாக்கி மரு த்துவம் மேற்கொள்ளாமல் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் மிக முக்கியமானது.அரசு மருத்துவ மனைகளிலோ இடமில்லை.தனியார் மருத்துவமனைகளிலும் இப்பொழுது இ தே நிலைதான்.

தனியார் மருத்துவ பரிசோதனைக் கூடங்கள் நோய் க ண்ட றியவே இரண்டாயிரம் மூன் றாயிரம் என அவரவ ர்களின் விருப்பத்திற்கேற்றபடி வசூலிக்கின்றனர். எட்டா யிரம் பத் தாயிரம் என நுரையீரல் சோதனைக்காக பெறு கின்றனர். இவை தொடர்பான மற்ற இர த்த சோதனை க ளுக்கும் சேர்த்து பல்லாயிரக்கணக்கான கோடிகள் மக்க ளிடமிருந்து ம ருத்துவ சோதனை எனும் பேரில் கொள் ளையடிக்கப்படுகின்றன.இதுபோக மருத்துவ னையில் உள்நோயாளியாகும் நிலை ஏற்பட்டு விட்டால் அவர்கள் கே ட்கின்ற பணத் தை தராமல் வெறும் உடலைக்கூட திரு ப் பித்தர மாட்டார்கள்.பணம் படைத்தவர்களால் எப் படி யும் வாழ்ந்துவிட முடியும். மாத ஊதியத்தை நம்பியும், வெறும் கை கால்களை க்கொ ண்டும் நாள் தோறும் உழைத்து வாழும் இம்மக்களின் துயரங்கள் சொல்லி மாளாது.
என்னுடைய அனுபவத்தில் இதைக்கூற கடமைப்பட்டுள்ளேன்.

தொடக்கத்திலேயே நோயைக்கண்டறிந்து மருத்துவம் மேற்கொண்டால் மருத்துவம னை யில் அனுமதிக்கப்படும் நிலை உருவாகாது.புதிய அரசு மிக விரைவாக நிலைமை யை சமாளித்து நோய்ப்பரவலை கட்டுக்குள் கொண்டு வர வேண்டுமானால் இதைச் செய்வது அவசியம் என எண்ணுகின்றேன். நோய் முதன்முதலாக கண்டறியப்பட்ட சீன நாடு இன்று மகிழ்ச்சியாக உள்ளது.அவர்கள் கையாண்ட பல தலைமுறைகள் கையாண்ட பாரம்பரிய மருத்துவத்தை ஆங்கில மருத்துவத்துடன் இணைத்து கோரோனாவை முற்றிலுமாக ஒழி த்தார்கள்.இதைத்தான் நம்முடைய இந்திய அரசும் உடனடியாக இதைச்செய்திருக்க வே ண்டும்.இவ்வளவு பேரழிவை சந்தித்த பிறகும் மேலும் மேலும் தயங்குவதன் நோக்கம் தா ன் என்ன? சித்த மருத்துவத்தில் தேர்ச்சியடைந்த பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மருத் துவ ர்கள் நம் மிடம் உள்ளதாகக்கூறுகின்றனர்.இதை தவிர்த்து ஹோமியோபதி மருத்துவமும் கொ ரா னாவை கட்டுப்படுத்துவதில் சிறந்த வெற்றி கண்டிருக்கின்றது.

இத்துடன் ஆயுர்வேதம் மருத்துவத்தையும் இணைத்து இம்மூன்று மருத்துவர்களையும் கொ ண்ட உடனடி மருத் துவ மைய்யங்களை உருவாக்கலாம். இதற்கான பெருத்த செல வுகளை அரசு சந்திக்க நே ராது. ஆங்காங்கே இருக்கின்ற பள்ளிக்கூடங்கள் போன்ற அரசு கட்டிடங்களை மைய் யங் களாக உருவாக்கலாம்.இதைச்செய்தாலே தொடக்க நிலையி லே யே கொரோனா தொற்று கட்டுக்குள் வந்து விடும்.உயிருக்கு உத்திரவாதம் இல்லாத நி லை க்கு மக்கள் தள்ளப்பட்டு மருத்துவ மனைகளைத்தேடி தஞ்சமடைய வேண்டி இருக்கா து. எனக்குத்தெரிந்த சித்த மற்றும் ஹோமியோபதி மருத்துவர்கள் மருத்துவ மனையில் தங்க வேண்டிய தேவை இல் லாமலேயே முழுமையாக குணப்படுத்தி விடுகின்றனர். த யவு செய்து பீதியில் உறைந்து கிடக்கும் மக்களுக்காக அரசு இக்கோரிக்கையை உட ன டி யா க பரிசீலித்து நோயிலிருந்தும் உயிர் இழப்பிலிருந்தும் காப்பாற்றுங்கள்.இதைச் செ ய்வதால் தொற்று ஏற்பட்டால் பணத்துக்கு எங்கே போவது எனும் மக்கள் பணம் செல வழி க்கத் தேவையில்லை. ஊரடங்கையும் நீடிக்கத் தேவையில்லை.தொழிலும் உற்பத் தியும் முடங்கி நம் பொருளாதாரமும் இழக்கத்தேவை இருக்காது.

நன்றி!
– தங்கர் பச்சான் 
தமிழ்க்குடி மகன்