நெல்லை அருகே பைக் மீது கார் மோதி விபத்து: காவலாளி பலி

நெல்லை அருகே பைக் மீது கார் மோதி விபத்து: காவலாளி பலி

திருநெல்வேலி அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் தனி யார் நிறுவன காவலாளி உயிரிழந்தார்.

திருநெல்வேலி அருகே உள்ள தச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்த அப்துல் ரகுமான் என்பவ ரின் மகன் அஸரப் அலி(62). தனியார் நிறுவன காவலாளி. இவரும், கங்கைகொண்டான் அருகே உள்ள வெங்கடாசலபுரம் பகுதியைச் சேர்ந்த சின்னகருப்பசாமி என்பவரும் ஒரே பைக்கில் தச்சநல்லூர் நோக்கி வந்துகொண்டிருந்தனராம்.

இவர்கள் இருவரும் மதுரை – கன்னியாகுமரி சாலை யில் குறிச்சிகுளம் விலக்கு அருகே வந்தபோது, எதி ரே வந்த கார் இவர்கள் மீது எதிர்பாராத விதமாக மோ தி விபத்துக்குள் ளானதாகக் கூறப்படுகிறது. இதில், அஸரப் அலி, சின்னகருப்பசாமி ஆகிய இரு வருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக இருவரையும் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவம னைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால், வழியிலேயே அஸரப் அலி உயிரிழந்தார். சின்ன கருப்பசாமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து தாழையூத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.