20 வருடங்களை கடந்த ‘அழகி’ திரைப்படம் !

20 வருடங்களை கடந்த ‘அழகி’ திரைப்படம் !

20 வருடங்களை கடந்த ‘அழகி’ திரைப்படம் ! மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட ‘அழகி ‘நடிகை நந்திதாதாஸ் !

தமிழ் சினிமா வரலாற்றில் பொன் மகுடமாக திகழும் ‘அழகி’ படம் வெளியாகி இன்று 20 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. ஒவ்வொருவரின் வாழ்க்கையை புரட்டி பார்க்கும் டை ரியை போன்று, பள்ளிக்கால காதல், வாழ்வின் மீது ஏற்படுத்தும் தாக்கத்தை அழகான காவியமாக சொன்ன படம் அழகி. இயக்குநர், ஒளிப்பதிவாளர் தங்கர்பச்சான் இயக்கத் தில், பார்த்திபன், நந்திதாதாஸ், தேவயானி நடித்த இப்படம் தமிழகத்தில் வெள்ளி விழா கொண்டாடியது.

இப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவு பெற்றதை ஒட்டி, படத்தின் ரசிகர்கள் உட்பட பலரும், படம் குறித்த தங்கள் மலரும் நினைவுகளை இணையமெங்கும் பகிர்ந்து வருகின் றனர். இப்படத்தில் முதன்மை பாத்திரத்தில் நடித்து நம் அனைவர் மனதையும் கவர்ந்த ந டிகை நந்திதா தாஸ், இது குறித்து பகிர்ந்து கொண்டதாவது…

“எல்லோருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்! 

அழகி படம் வெளியாகி 20 வருடங்கள் கடந்து விட்ட து.  இதை நம்பவே முடியவில்லை. என க்கு நரைத்த முடி, கன்ணாடியெல்லாம் வந்து விட்டது. ஆனாலும் 20 வருடங்கள் கடந்ததை நம்ப முடியவில்லை. படத்தி ன் நினைவுகள் இன்னும் பசுமையாக மனதில் உள் ளது. என் னை இப்படி ஒரு அற்புதமான படத்தில் நடி க்க வைத்ததற்காக, இயக்குநர் தங்கர் பச்சா னுக்கு நன்றி. அதே போல் உடன் நடித்த அற்பு தமான நடிகர்கள் பார்த்திபன், தேவயானி, சாயாஜி ஷிண்டே மற்றும் அனைவருக்கும் ந ன்றி.

மிக முக்கியமாக இசைஞானி இளையராஜா அவர்களுக்கு. என்றென்றும் மனதில் நிற்கும் அற்புதமான பாடல்களையும்.. இசையையும் தந்ததற்காக நன்றி. மீண்டும் “அழகி 2” எடுக் கப்பட்டு, அதில் நாங்கள் அனைவரும் இணைந்து அந்த மேஜிக்கை நிகழ்த்த வேண்டும் என ஆசைப்படுகிறேன். அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் நன்றி.!!”
இவ்வாறு வாழ்த்து வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.