விதார்த் கதையின் நாயகனாக நடிக்கும் க்ரைம் த்ரில்லர்

விதார்த் கதையின் நாயகனாக நடிக்கும் க்ரைம் த்ரில்லர்

கிரினேடிவ் குழுமத்தை சேர்ந்த கிரினேட்டிவ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர்.மோகன் ராகேஷ் பாபு தயாரிக்கும் முதல் திரைப்படத்தில் நடிகர் விதார்த் கதையின் நாயகனாக நடிக்க, இவருடன் இணைந்து நடிகை ரோஷினி பிரகாஷ் நடிக்கிறார்.

தமிழில் தயாராகும் இப்படம் புலனாய்வு விசாரணை பாணியிலான கிரைம் திரில்லர் தி ரைப்படம் ஆகும்..

எழுத்தாளர் ஸ்ரீனிவாச சுந்தர் கதை,திரைக்க தை,வ சனம் எழுதும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் ம ணிமாறன் நடராஜன் இயக்குகிறார். ஒளிப்பதிவை எஸ்.ஆர்.சதீஷும் இசை ஜிப்ரானும்,நாகூரான் ராமச் சந்திரன் படத்தொகுப்பையும்,சண்டைக்காட்சியை தினேஷ் சுப்புராயன் அவர்களும் அமைக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு மூன்று கட்டங்களா க நடைபெற உள்ளது.,என்றும் அதன் முதற் கட்ட படப்பிடிப்பு சென்னையில் இன்று தொடங் கி இருப்பதாகவும் படக்குழுவினர் தெரி வித்துள்ளனர்.