ரேகா நடிக்கும் ‘மிரியம்மா’ ரேகா நடிக்கும் ‘மிரியம்மா’ பட தொடக்க விழா

ரேகா நடிக்கும் ‘மிரியம்மா’ ரேகா நடிக்கும் ‘மிரியம்மா’ பட தொடக்க விழா

பூஜையுடன் தொடங்கிய ரேகாவின் ‘மிரியம்மா’ மீண்டும் கதையின் நாயகியான ரேகா

‘கடலோர கவிதைகள்’ புகழ் நடிகை ரேகா சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கதையி ன் நாயகியாக முதன்மையான வேடத்தில் நடிக்கவிருக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘மிரி யம்மா’ என பெயரிடப்பட்டிருக்கிறது. இதன் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக ந டைபெற்றது.

அறிமுக இயக்குநர் மாலதி நாராயண் இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படம் ‘மிரிய ம்மா’. இதில் மூத்த நடிகை ரேகா கதையின் நாயகியாக நடிக்கிறார். இவருடன் எழில் து ரை, சினேகா குமார், அனிதா சம்பத், விஜே ஆஷிக், மாலதி நாராயண் ஆகியோர் நடிக் கி றார்கள். ஜேசன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, இந்த திரைப்படத்தில் இடம் பெறும் பா டல்களுக்கு ஏ. ஆர். ரெஹைனா இசையமைக்கிறார்.

படத்தொகுப்பு பணிகளை கமல் கவனிக்க, கலை இயக்க பணிகளை ‘யாத்திசை’ புகழ் ர ஞ்சித் மேற்கொள்கிறார். பெண்ம ணி களை மையப்படுத்தி தயாராகும் இந்த திரைப் பட த்தை 72 ஃபிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் இயக்குநரான மாலதி நாராயண் தயாரி க்கிறார்.

திருமணத்திற்குப் பிறகு குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த நடிகை ரேகா, இருபது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கதையின் நாயகியாக.. அழுத்தமான அம்மா கதாபாத் திரத்தில் நடிப்பதால், ‘மிரியம்மா’ படத்தின் அறிவிப்பு வெளியான நிலையிலேயே.. இப்ப டத்தை பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் ஏற்பட்டிருக்கிறது.