என்னி துணிகா திரைப்பட விமர்சனம்

ன்னி துணிகா திரைப்பட விமர்சனம்

நடிகர், நடிகைகள்-;

ஜெய், அதுல்யா ரவி, அஞ்சலி நாயர், வம்சி கிருஷ்ணா, வித்யா பிரதீப், மாரிமுத்து, சுனில் ரெட்டி, சுரேஷ் சுப்ரமணியன் மற்றும் பலர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்-;

எழுதி இயக்கியவர் –  எஸ்.கே.வெற்றி செல்வன், இசை  –   சாம் சி.எஸ்., தயாரிப்பாளர்  –  சு ரேஷ் சுப்ரமணியன், ஒளிப்பதிவு  –   ஜே.பி.தினேஷ்,  குமார்,படத்தொகுப்பு   –  வி.ஜே.சாபு ஜோசப், நடனம்   –  ஷெரீப், சண்டை இயக்குனர்  –  ஜி.என்.முருகன், கலை இயக்குநர்  –  கே. ஆருசாமி, கதை, கதை  –  சுரேஷ் சுப்ரமணியன். வடிவமைப்பாளர்  –  சத்யா என்.ஜே, வி எஃப்எக்ஸ்  –  நெக்டர் பிக்சல்கள் – ஸ்டாலின் சுப்ரமணியன், ஆனந்த், டிஐ  –  வர்ணா டிஜி ட்டல் ஸ்டுடியோஸ், டிஐ கலரிஸ்ட்  –  நந்தா, டப்பிங்  –  ஏவிஎம்.சி ஸ்டுடியோ, சவுண்ட் இன் ஜினியர்  –  ஷாஜு.சி (ஏவிஎம்.சி) , ஒலி வடிவமைப்பு  –  எம். .சரத்குமார் , ஒலிக்கலவை  –  ஹ ரிஷ் , ஸ்டில் போட்டோகிராஃபர்  –  எம்.தினேஷ் , புரமோஷன் போட்டோகிராஃபர்  –  போட் டோகிராஃபர் – எல்.ராமச்சந்திரன் , சோஷியல் மீடியா டீம்  –  சாம் ஜாக் , பப்ளிசிட்டி டிசை னர்  –  ராஜா, டிசைன் பாயின்ட் , மக்கள் தொடர்பு –  சுரேஷ் சந்திரா, ரேகா டி’ஒன் , வசனவ ரிகள்  –  ராஜலட்சுமி , ஒப்பனை  –  எம்.என் .பாலாஜி , காஸ்ட்யூமர்  –  ஷேக் நபுல் , தயாரிப்பு நிர்வாகிகள்  –  எம். ஜே.பாரதி, கே.வீரமணி , தயாரிப்பு மேலாளர்கள்  –  கிரி. செங்குட்டுவ ன், அண்ணாமலை  மற்றும் பலார் பண்ணியாடி ற்றினார் .

திரை கதை-;

விலையுயர்ந்த பொருளுக்கான போராட்டத்தில் நடக்கும் இழப்புகளும், பழிவாங்கலும், து ரோகங்களுமே ‘எண்ணித் துணிக’ படத்தின் ஒன்லைன்.  சென்னையில் உள்ள அமைச்ச ர் ஒருவரின் சுமார் 2 ஆயிரம் கோடி மதிப்புள்ள வைரங்கள் ஒரு நகைக் கடையில் இருக்க  ந கைக்கடைக்குள் நுழையும் கொள்ளைக் கும்பல் அதை எப்படியாவது தட்டி தூக்கவேண் டும் என நினைத்து களத்தில் இறங்கும் கொள்ளை கும்பல், துப்பாக்கி முனையில் நகைக ளைவெற்றிகரமாக கொள்ளையடித்துச் செல்கிறது. அப்போது எதிர்வரும் சிலர் சுட்டுக் கொ ல்லப்படு கிறார்கள்.

இதில் படத்தின் நாயகனும் பாதிக்கப்படுகிறார். இப்படி திருடி விட்டு தப்பிசெல்லும் இந்த கும்பலினால்   தனது வாழ்கையில் இழப்பை சந்தித்த கதாநா யகன் அவர்கள் யார்? அவர் களின் நோக்கம் என்ன? எதற்காக இப்படி செய்கிறார்கள்? என் பதை காவல் துறை உதவி யில்லாமல் படத்தின் நாயகன் துணிந்து எப்படி கண்டுபிடிக்கி றார்  ஜெய் எப்படியாவது இவர்களை பழிவாங்க வேண்டுமென்கிற முனைப்பில் அவர் ம றுபுறம் களமிறங்குகிறார். இறுதியாக அந்த கும்பலை பிடித்து கொடுத்தாரா? இல்லை ப ழிதீர்த்தரா? எப்படி செய்தா ர்?என்பது தான் ‘எண்ணித் துணிக’ படத்தின் திரைக்கதை.

படத்தின் முன்னோட்டத்தை பார்க்கவும் -;

திரைப்பட விமர்சனம்-;

சுமார் 2 ஆயிரம் கோடி மதிப்புள்ள வைரங்கள் ஒரு நகைக் கடையில் இருக்க, அதை எப் படியாவது தட்டி தூக்கவேண்டும் என நினைத்து களத்தில் இறங்கும் ஒரு கொள்ளை கும் பல், அதை வெற்றிகரமாக திருடியும் செல்கின்றனர். இப்படி திருடிவிட்டு தப்பிசெல்லும் இந்த கும்பலினால் ஏற்கனவே தனது வாழ்கையில் இழப்பை சந்தித்த கதாநாயகன் ஜெய் எப்படியாவது இவர்களை பழிவாங்க வேண்டுமென்கிற முனைப்பில் அவர் மறுபுறம் கள மிறங்குகிறார். இறுதியாக அந்த கும்பலை பிடித்து கொடுத்தாரா? இல்லை பழிதீர்த்தரா? எப்படி செய்தார்?  

 

கேப்மாரி படத்தில் ஜெய்யுடன் திரை இடத்தைப் பகிர்ந்து கொண்ட அதுல்யா ரவி, இந்தப் படத்தில் மீண்டும் நடிகருடன் கைகோர்க்கிறார். ரெயின் ஆஃப் ஆரோஸ் என்டர்டெயின் மென்ட் மூலம் தயாரிக்கப்படும் இப்படத்தில் வைபவின் சகோதரர் சுனில் ரெட்டி மற்றும் அஞ்சலி நாயர் ஆகியோரும் சாம் சிஎஸ் இசையமைத்துள்ளனர். படத்தின் பாடல் காட்சி களுக்காக சென்னை, மதுரை மற்றும் வடகிழக்கில் மேகாலயா போன்ற இடங்களில் பட மாக்கப்பட்டுள்ளது.வசந்த்திடம் உதவி இயக்குநராக இருந்து 15 வருடங்கள் போராட்டத்து க்கு பிறகு இயக்குநராக அறிமுகமாகியிருக்கிறார் எஸ்.கே. வெற்றிச்செல்வன்.

எண்ணித்துணிக என்ற தனது முதல் படத்தை ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவாக்கியி ருக்கிறார்.நகைக்கடையில் நடக்கும் கொள்ளையால் பாதிக்கப்படும் சாமானியன் எண் ணித்துணிந்து என்ன செய்கிறான் என்பதை சுவாரசியம் குறையாமல் கூறியிருக்கிறார் வெற்றிச்செல்வன். காதல், காமெடி என வலம் வந்த ஜெய் இந்தப் படத்தில் ஆக்ஷன் அவ தாரம் எடுத்திருக்கிறார். எடுத்திருக்கும் அவதாரம் அவருக்கு பொருந்தியும்போவது ப்ள ஸ். அதேசமயம் ஆக்ஷன் காட்சிகள் தவிர்த்து பல காட்சிகளில் பழைய ஜெய்யே தெரிகி றார். அதுல்யாவை பொறுத்தவரை தனக்கான கதாபாத்திரத்தை நன்றாக செய்திருக் கிறார்.

கதை சாதாரண கதைதான் என்றாலும் அதை காப்பாற்றுவது திரைக்கதைதான். ஒவ் வொரு போர்ஷனாக படம் விரிந்தாலும் இயக்குநர் அதை ரசிகர்களுக்கு புரியும்படி சொ ல்லியிருக்கிறார். ஆனால், ஆக்‌ஷன் காட்சிகள் மனதில் பதியும் அளவு காதல் காட்சிகள் அவ்வளவாக பதியவில்லை. ஜெய், அதுல்யா இருவருக்குமான காதல் போர்ஷனில் இன் னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்.வில்லனாக வம்சியும், சுரேஷ் சுப்ரமணியனும் நடித்திருக்கிறார்கள். வம்சி வழக்கம்போல் தன் நடிப்பில் மிரட்ட மற்றொரு வில்லன் சுரேஷ் சுப்ரமணியனுக்கு அவ்வளவாக பெரிய வேலையில்லை என்றே தோன்றுகிறது.

‘அவ இல்லத்தரசி நீ இதயத்தரசி’, ‘இப்டிலாம் பண்ணா பிக்பாஸுக்கு கூப்டுவாங்கனு நி னைப்பு’, ‘நகையை பிடிக்க சொன்னா புகையை பிடிச்சிருக்கிங்க இதுதான் புகை போட்டு பிடிக்கிறதா’ போன்ற வசனங்கள் கலகலப்பு ஏற்படுத்துகின்றன. சாதி குறித்த ஒரு கேள் விக்கு ஜெய் அளிக்கும் பதில் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.ஒன்றில் ஆரம்பித்து அடுத் த விஷயத்துக்கு சென்று மீண்டும் மற்றொரு விஷயத்த்தை தொட்டு அனைத்து விஷயங் களையும் இணைக்கும் திரைக்கதைக்கு எடிட்டிங் சிறப்பாக அமைவது மிக மிக அவசியம். அதை கனகச்சிதமாக செய்திருக்கிறார் எடிட்டர் சாபு ஜோசப்.

அதேபோல் படத்துக்கு மிகப்பெரிய பலம் சாம் சி.எஸ்ஸின் இசை.மனிதர், பின்னணி இ சையில் அதகளம் செய்திருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் சாம் சிஎஸ்ஸின் இசை அல் டிமேட் ரகம். படத்தில் பாடல்கள் குறைவுதான் என்றாலும் இருக்கும் இரண்டு பாடல்களும் மனதில் அப்படியே ஒட்டிக்கொள்கின்றன. குறிப்பாக, என்னடியே என்னடியே பாடல். கா ர்த்திக் நேத்தா எழுதியிருக்கும் அந்தப் பாடலில் பல வரிகள் கவனம் கொள்ள வைக்கின் றன. வரிகளை ரசிப்பதா, இசையை ரசிப்பதா என குழம்பும் அளவுக்கு அந்தப் பாடல் இரு க்கிறது.அந்தப் பாடலின் மேக்கிங்கில் வெற்றிச்செல்வன், தான் வசந்த் பட்டறையிலிரு ந்து வந்தவன் என்பதை உணர்த்தியிருக்கிறார்.

 

மேக்கிங்கில் அவ்வளவு கூல். முக்கியமாக சாம் சிஎஸ் போன்ற இசையமைப்பாளரை எப் படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்பதை கோலிவுட்டுக்கு நீண்ட நாள்க ளுக்கு பிறகு நினைவுப்படுத்தியிருக்கிறார் வெற்றிச்செல்வன். வாழ்த்துகளும், நன்றி களும்.த் ரில்லர் பாணியில் ஆரம்பிக்கும் கதை அதே வேகத்தில் செல்லும் என ரசிகர்கள் எதிர்பா ர்த்திருக்க திடீரென காதல் காட்சிகள் உள்ளே வருவது முதல் பாதியில் கொஞ்சம் சோர் வை ஏற்படுத்துகிறது. அதேசமயம் ரசிகர்களிடம் மிகப்பெரிய கேள்வியை எழுப்பி முதல் பாதியை முடித்தது ரசிகர்களுக்கு ஏற்பட்ட சோர்வை நீக்கி ஆவலை எழுப்புகிறது.

இரண்டாம் பாதியில் இருக்கும் திரைக்கதை பல முடிச்சுகளை அவிழ்க்கின்றன. அவிழும் முடிச்சுக்கள் சுவாரசியமாகவும் இருக்கின்றன. பக்காவான திரைக்கதையோடு களமிற ங்கிய வெற்றிச்செல்வன் படத்தின் நீளத்தை கொஞ்சம் கத்தரித்திருக்கலாம் என்ற நினை ப்பு எழுகிறது.க்ளாஸ் இயக்குநர் வசந்த்திடமிருந்து வந்திருந்தாலும் வெற்றிச்செல்வன் கமர்ஷியலை கையில் எடுத்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். அதேபோல், இதுபோ ன்ற கமர்ஷியல் கதைக்கு திருக்குறளான ‘எண்ணித்துணிக’ என தலைப்பு வைத்ததும் அழகு.

அனைத்தையும் மறந்து ஒரு ஜனரஞ்சகமான படத்தை ரசிக்க வேண்டுமென்று நினைப் பவர்கள் துணிந்து எண்ணித்துணிக படத்துக்கு சென்று வரலாம்.மதன் மற்றும் கும்பலின் கொள்ளை தவறாக நடக்கும்போது, ​​கொள்ளையடித்ததை தனது மேலிடத்திற்கு வழங்க வேண்டிய அழுத்தத்திற்கு உள்ளாகிறான். கதிர் தோன்றும்போது விஷயங்கள் சிக்க லா க த்தொடங்குகின்றன, இறுதியாக அன்று உண்மையில் என்ன நடந்தது என்பதை வெளிப்ப டுத் துகிறார்.ஜெய் ஆக்‌ஷன் காட்சிகளில் மிரட்டியிருக்கிறார். முழு எனர்ஜியோடு பட த்தி ல் நடித்துள்ளார். காதல் காட்சிகள் மற்றும் எமோஷ்னல் காட்சிகளில் தான் சற்று போரடிக்கிறார்.

அதுல்யாரவி மிக அழகாக இருக்கிறார். ஆனால் அவரது நடிப்பும் கேரக்டர் வடிவமும் படு வீக்காக இருக்கிறது..அஞ்சலி நாயர் கேரக்டர் ஓ.கே ரகம். வில்லன்ஸ் எல்லோருமே நடிப் பில் மிகைத்தன்மையை அள்ளித்தெளித்துள்ளார்கள்பின்னணி இசை போதுமான அளவு படத்திற்கு உதவியிருந்தாலும் இன்னும் போதவில்லை என்றே தோன்றுகிறது..பாடல்க ளு ம் பெரிதாக எடுபடவில்லை. ஒளிப்பதிவு சண்டக்காட்சிகளில் மட்டும் நன்றாக இருந்ததுஏ னோ தானோ என படம் ஜம்ப் ஆகிறது. திரைக்கதையில் கூடுதல் உழைப்பைச் செலுத் தி யிருந்தால், எண்ணித் துணிக வெல்டன் என துணிந்துச் சொல்லிருக்கலாம்..ஜஸ்ட் மிஸ்! இருப்பினும் முன்பாதியிலும் பின்பாதியிலும் வரும் சில ட்விஸ்ட்கள் படத்தை காப்பாற் றுகிறது. 

இது என் தனிப்பட்ட விமர்சனம் எனவே தயவு செய்து திரையரங்குக் சென்றுற்
திரை ப்படத்தை பார்க்கவும்.

எழுதியவர் – டி.ஹெச்சு பிரசாத்- பி 4 யு மதிப்பு 3.5 / 5