மா.ரா. செளந்தரராஜன் 100-வது வயதிலும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று சாதிக்க வேண்டும்!” –

மா.ரா. செளந்தரராஜன் 100-வது வயதிலும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று சா திக்க வேண்டும்!” –

‘மா.ரா. செளந்தரராஜன் 100-வது வயதிலும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று சா திக்க வேண்டும்!” -முனைவர் மா.ரா. செளந்தரராஜன் எழுதிய ‘நில், கவனி, யோசி, செ ய ல்படு…’ நூல் வெளியீட்டு விழாவில் தமிழ்நாடு காவல்துறை முன்னாள் தலைவர் ‘வால்டர்’ தேவாரம் பேச்சு

சர்வதேச விளையாட்டு வீரரும், சமூகச் சிந்தனையாளருமான முனைவர் மா.ரா. செளந் தரராஜன் எழுதிய ‘நில், கவனி, யோசி, செயல்படு…’, ‘Stop, Listen, Think, Act…’ என்ற இரு நூ ல்க ளின் வெளியீட்டு விழா 11.9.2022 ஞாயிற்றுக் கிழமையன்று சென்னை வடபழனி கிரீன் பா ர்க் நட்சத்திர ஹோட்டலில் சிறப்பாக நடந்தது.

நிகழ்வில், சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.கே. கிருஷ்ணன், தமிழ்நாடு காவல்துறை முன்னாள் தலைவர் ‘வால்டர்’ தேவாரம், தமிழ்நாடு காவல்துறை முன்னாள் தலைவர் பன்னீர் செல்வம், மாநில திட்டக்குழு உறுப்பினர் செயலாளர் டி.எஸ். ராஜசேகர், சென்னை விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.வி. பிரபாகர் ராஜா, சென்னை உ யர்நீதிமன்ற வழக்கறிஞர் முத்துராஜ், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரும் மாவட்ட பத்திரப்பதிவு முன்னாள் அலுவலருமான துரைராஜ், சிவசேனா மாநில செயல்தலைவர் க. சசிக்குமார், கிராமணி மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனர் தலைவர் கே.வி.எஸ். சர வணன், ‘சிபிசிஎல்’ கஜேந்திரபாபு, தமிழ்நாடு சின்னத்திரை இயக்குநர்கள் சங்கத் தலை வர் தளபதி, பேராசிரியர் முனைவர் நா. சுலோசனா (தமிழ்மொழி (ம) மொழியியல் புலம் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்), சிகரம் குழும இயக்குநர் சந்திரசேகர், தமிழ்நாடு த லைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கத் தலைவர் முனைவர் குமார், புத்தகத்தைப் பதிப்பித்துள்ள மணிமேகலைப் பிரசுரத்தின் நிர்வாக இயக்குநர் ரவி த மிழ் வாணன், வசந்தா பதிப்பக நிறுவனர் மோ. பாட்டழகன் உள்ளிட்ட பலர் கலந் துகொண்ட னர்.

‘நில், கவனி, யோசி, செயல்படு…’ நூலினை தமிழ்நாடு காவல்துறை முன்னாள் தலைவர் ‘வால்டர்’ தேவாரம் வெளியிட, சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.கே. கிரு ஷ்ணன் பெற்றுக் கொண்டார்.

‘Stop, Listen, Think, Act…’ நூலினை சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.கே. கிரு ஷ்ணன் வெளியிட, தமிழ்நாடு காவல்துறை முன்னாள் தலைவர் பன்னீர் செல்வம் பெற்று க் கொண்டார்.

விழாவில், சிவசேனா மாநில செயல்தலைவர் க. சசிக்குமார், ‘‘நீதிநெறியை, நல் லொழு க்கத்தைக் கற்பிக்க சிலப்பதிகாரம், திருக்குறள் உள்ளிட்ட நூல்கள், மருத்துவம் குறித்து தெரிந்துகொள்ள போகர், புலிப்பாணி உள்ளிட்டோர் எழுதிய நூல்கள் இப்படி ஏராளமான நூல்களுக்கு நம்முடைய மண்தான் முன்னோடி. அதனால்தான் நம் மக்கள் அறிவில் சிற ந்தவர்களாக இருந்தார்கள். ஆங்கிலேயர்களின் ஊடுருவலுக்குப் பின்னர் அவர்கள் நம் மை நிரந்தரமாக ஆளவேண்டும் என்றால் நம் மக்கள் அறிவில் சிறந்தவர்களாக இருப்ப தை மாற்றவேண்டும் என தீர்மானித்தார்கள். அதற்காகவே மெக்காலே கல்வித் திட்டத் தை கொண்டு வந்தார்கள். இன்றைக்கும் நாம் அதைத்தான் பின்பற்றுகிறோம்.

இளைய தலைமுறை நம் முன்னோர்களைப் பற்றியெல்லாம் படிக்க வேண்டும். ஆனால், படிப்பதில்லை. மாணவச் சமுதாயம், இளைஞர்கள் பல்வேறு விதங்களில் சீரழிகிறார்கள். அவர்கள் மீதெல்லாம் அக்கறை கொண்டு விழிப்புணர்வூட்டும் கருத்துக்களை ‘நில், கவ னி, யோசி, செயல்படு…’ நூலின் ஆசிரியர் மா.ரா. செளந்தரராஜன் விவேகானந்தர் போல் எடுத்துச் சொல்லியிருக்கிறார். இந்த நூல் பல மொழிகளில் பதிப்பிக்கப்பட்டு வெளிவர வேண்டும். நூலாசிரியர் மேலும் பல நூல்களைப் படைக்க அவருக்கு அறிவையும் ஆற்ற லையும் இறையருள் வழங்க வேண்டும்” என்றார்.

தமிழறிஞர் ம.பொ.சி.யின் உறவினரும், கிராமணி மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனர் தலைவருமான கே.வி.எஸ். சரவணன், ‘‘நூலாசிரியர் உற்சாகத்துக்குப் பேர் போனவர். உட னிருப்பவர்களை தளபதி தளபதி என்று அழைத்து அவர்களையும் உற்சாகப்படுத்துபவர். இந்த நூலில் விக்கிபீடியா போல் கூட்டுக் குடும்பச் சூழல், கொரோனா காலகட்ட அனுபவ ம் என எல்லாமும் இருக்கிறது. அவை எல்லாமும் எல்லாருக்கும் தெரிந்தவைதான். ஆனா ல், இந்த நூலில் அவை சுவாரஸ்யமாக இருக்கிறது. நூலாசிரியர் பற்றி சுருக்கமாக சொ ல்ல வேண்டுமென்றால் அவர் படிப்பில் மெரிட், பண்பில் மெரிட், அன்பில் மெரிட்” என் றார்.

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் முத்துராஜ்,‘‘இந்த நூலின் ஆசிரியர் செளந்தரரா ஜ ன் எப்போதும் சக்ஸஸ், சக்ஸஸ் என்று சொல்லிக் கொண்டே இருப்பார். அவருடன் இரு ந் தால் அவருடைய எனர்ஜி நமக்கு டிரான்ஸ்பர் ஆகிவிடும்” என்றார்.மதபோதகர் Rev. ஜெ ய சிங், ‘‘நூலாசிரியர் சிறுவயதிலேயே சாம்பியனாகி சாதித்திருப்பது நாட்டுக்குப் பெரு மை. அ வருக்காக, அவரிடம் சொல்லிவிட்டு தினமும் காலை நான்கு மணிக்கு ஜெபம் செ ய் கிறேன். அவர் மேலும் சாதனைகள் படைத்து தமிழகத்துக்கு சிறப்பு சேர்க்க பிரார்த்தி க் கிறேன்” என்றார். தமிழ்நாடு தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கத் தலைவர் முனை வர் குமார், ‘‘மா.ரா. செளந்தரராஜன் சமூக அக்கறை கொண்ட மாமனி த ர். மாணவர்களு க்கு எடுத்துக்காட்டாக இருப்பவர்.

பொதுநல நோக்கில் புத்தகம் எழுதியுள்ளார். அரசாங்க ம் அவருக்கு, அவரது தகுதிக்குரிய வாரியத்தில் பதவி வழங்கி கெளரவிக்க வேண்டும்” எ ன்றார். ‘சிபிசிஎல்’ கஜேந்திரபாபு, ‘‘செளந்தரராஜன் அவர்களை 35 வருடங்களாகத் தெரியும். தன்னம்பிக்கையின், உற்சாக த்தின் அடையாளம் அவர். எதையும் ஈஸியாக எடுத்துக் கொள்பவர்” என்றார். சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரும் மாவட்ட பத்திரப்பதிவு முன்னாள் அலுவலருமான துரை ராஜ் ‘‘சமீபத்தில்தான் இந்த நூலின் ஆசிரியர் எனக்கு பழக்கம். அவர் சொன்னதை .