மாநாடு சிலம்பரசனுக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும்” ; ஒய்’ஜி.மகேந்திரன் நம்பிக்கை

மாநாடு சிலம்பரசனுக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும்” ; ஒய்’ஜி.ம கேந்தி ரன் நம்பிக்கை

மாநாடு முடிந்ததும் நாடகம் போட விரும்பும் சிலம்பரசன் ; ஒய்.ஜி.மகேந்திரன் வெளியி ட்ட ஆச்சர்ய தவகல்

நாடகத்தில் நடிக்க ஆசை ; ஒய்.ஜி.மகேந்திரனிடம் ஆசையை வெளிப்படுத்திய சிலம்பர சன்

“மாநாடு படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுடன் எனது காம்பினேஷன் ரொம்பவே பேசப்படும்” ; ஒய்.ஜி.மகேந்திரன்

“சிறந்த திரைக்கதைகளில் ஒன்றை மாநாடு படத்துக்காக உருவாக்கியுள்ளார் வெங்க ட்பிரபு” ; பிரமிக்கும் ஒய்.ஜி.மகேந்திரன்

சிலம்பரசன் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் விறுவிறுப்பாக வளர்ந்து வருகிறது மாநாடு திரைப்படம்.. சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், அரசியல் பின்னணியில் பிரம்மா ண்டமாக உருவாகி வரும் இந்தப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, வா கை சந்திர சேகர், எஸ் ஏ சந்திர சேகர், ஒய்.ஜி,மகேந்திரன், உதயா, பிரேம்ஜி, மனோஜ் கே. பாரதி, அஞ்சனா கீர்த்தி, கருணாகரன், மகத் ராகவேந்திரா, டேனி, அரவிந்த் ஆகாஷ் என நட்சரத்தேர்விலேயே பிரமிக்க வைக்கிறார் வெங்கட் பிரபு.

குறிப்பாக இந்தப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில், நடிகர் ஒய்.ஜி.மகேந் திரன் நடித்தால் தான், பொருத்தமாக இருக்கும் என அவரை ஒருமனதாக தேர்வு செய்துள் ள னர் இயக்குநர் வெங்கட் பிரபுவும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும். நடிகர் திலகம் சிவாஜி ரஜினி, கமல் என ஒரே சமயத்தில் 3 ஜாம்பவான்களுடன் நகைச்சு வையில் கலக் கிய ஒய்.ஜி.மகேந்திரன், இப்போது சிலம்பரசன் காலகட்டத்திலும் அதே உற்சாகத்துடன் வளைய வருகிறார் என்பது ஆச்சர்யம்.

“மாநாடு” படத்தில் வெங்கட்பிரபு இயக்கத்தில் பணியாற்றுவது மற்றும் மற்றும் சிலம்பர சனுடன் இணைந்து நடித்த அனுபவங்கள் குறித்து நம்மிடம் பகிர்ந்துகொண்டார் ஒய்.ஜி.ம கேந்திரன். “கடந்த வருடமே “மாநாடு” படத்தில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தது.. எனக்கு வெ ங்கட்பிர புவின் படங்கள் பிடிக்கும்.. நானும் வெங்கட்பிரபுவும் நகைச்சுவை என்கிற ஒ ரே ஏரியாவி ல் பயணிப்பவர்கள் என்பதால் “மாநாடு” படத்தில் நடிக்க உடனே ஒப்புக் கொ ண்டேன்..

ஆனால் எதிர்பாராத விதமாக கடந்த வருடம் நிலவிய அசாத்திய சூழல் காரணமாக பட ப்பிடிப்பு சில மாதங்கள் தள்ளிப் போனாலும், இப்போது முழு வீச்சில் நடைபெற்று வரு கி றது. சிலம்பரசனை நான் சிறு வயதில் இருந்தே பார்த்து வருகிறேன்.. அவருடன் இதற்கு முன் “அன்பானவன் அடங்காதவன் அசராதவன்” என்கிற படத்தில் நடித்திரு ந்தேன்.. அதி ல் அவருடன் இணைந்து நடிக்கும் காட்சிகள் கொஞ்சமே இருந்தன.. ஆனால் இந்தப் படத் தில் படம் முழுதும் வருகின்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறேன்..

அதேபோல சிம்புவுடன் பல காட்சிகளில் நடித்தாலும், படத்தில் நான் எஸ்.ஜே.சூர்யா தரப் பு ஆளாக வருகிறேன்.. “வாலி” பட சமயத்தில் இருந்தே எஸ்.ஜே.சூர்யா பற்றி நிறைய கே ள் விப்பட்டிருந்தாலும் இப்போதுதான் அவருடன் முதன்முறையாக இணைந்து நடிக்கிறே ன். எங்களது காம்பினேஷன் பெரிய அளவில் பேசப்படும்.

படத்தில் என்னுடைய கதாபாத்திரம் என்னவென்று இப்போது என்னால் சொல்ல முடியா து. காரணம் கதையில் பல திருப்பங்களுக்கு காரணமான ஒரு கதாபாத்திரம் என்னுடை யது. என்னுடைய ஸ்டைலிலேயே நடிக்கும்படி எனக்கு சுதந்திரமும் கொடுத்து விட்டார் வெ ங்கட்பிரபு. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய இன்னொரு விஷயம் என்னவென்றால், இந்த ப்படத்தில் வெங்கட்பிரபு கையாண்டுள்ள திரைக்கதை மிகச்சிறந்த திரைக்கதைகளில் ஒன்றாக இருக்கும். இப்போது நான் சொல்வதை விட, படமாக நீங்கள் பார்க்கும்போது அ தை நிச்சயம் உணர்வீர்கள்..

பொதுவாக பெரும்பாலான படங்களின் தயாரிப்பாளர்கள் படப்பிடிப்பு தளத்திற்கு வருவ தே இல்லை. இன்னும் சிலரோ தினசரி வந்து ஏதாவது குறுக்கீடுகள் செய்துகொண்டே இரு ப்பார்கள். ஆனால் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தினசரி படப்பிடிப்புக்கு வந்துவிடு வார். படக்குழுவினரின் தேவைகளை அருகில் இருந்து கவனிப்பதுடன் படைப்பாளியின் சுதந்திரத்தில் எந்த குறுக்கீடும் செய்யாமல் அனைவருக்கும் சுதந்திரம் அளித்து ஒரு மிக ச்சி றந்த தயாரிப்பாளராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார்.

இதுவரை கிட்டத்தட்ட முன்னூறு படங்களுக்கு மேல் நடித்துள்ளேன்.. குறிப்பிட்ட சில படங் களை மட்டுமே, உடனே திரையில் பார்த்தாக வேண்டும் என்கிற உணர்வு ஏற்படும்.. “மாநா டு” படம் அப்படி ஒரு உணர்வை எனக்கு ஏற்படுத்தியுள்ளது… இதற்கு முன்பு சில படங்களி ல் சீரியஸான கதாபாத்திரங்களில் நடித்தேன். அது நகைச்சுவை நடிகனான என்னா லும் எல்லா விதமான கதாபாத்திரங்களிலும் நடிக்க முடியும் என்பதற்காகத்தான்.  மலையா ளத்தில் கூட “ஷ்யாமா ராகம்” என ஒரு படத்தில் நடித்துள்ளேன்.. கிட்டத்…