பெருங்காமநல்லூரின் கலகக் குரல்…தமிழ்நாட்டில் இருந்து ஓர் உலகக் குரல்

பெருங்காமநல்லூரின் கலகக் குரல்…தமிழ்நாட்டில் இருந்து ஓர் உலகக் குரல்

ஆகோள் நூல் அறிமுக விழாவில் கபிலன் வைரமுத்து பேச்சு

ஆகோள் என்ற இந்த நாவல் பெருங்காம நல்லூரின் கலகக் குரல். தமிழ்நாட்டில் இருந்து ஓர்உலகக் குரல் என்று

எழுத்தாளரும் பாடலாசிரியருமான கபிலன்வைரமுத்து பேசியிருக்கிறார்.  கபிலன் வைர முத்து எழுதி இயக்குநர் இமயம் பாரதிராஜா வெளியிட்ட ஆகோள் என்ற நா வலின் அறி மு க விழா தேனி மாவட்டத்தில் நடைபெற்றது. விழாவில் கபிலன்வைரமுத்து பேசியதா வது:

1920 ஆம் ஆண்டு பெருங்காமநல்லூரில் கை ரேகை சட்டத்திற்கு எதிராக ஆங்கிலேய அர சைஎதிர்த்து போராடி உயிர் நீத்த நம் முன்னோர்களுக்கு இந்த நாவலை காணிக்கை யா க்கிஇருக்கிறேன். அவர்களுடைய கதையை எழுதியிருக்கிறேன். பெருங்காம நல்லூர் கல வரத்தைமட்டுமே ஒரு நாவலாக எழுதியிருந்தால் இது ஒரு குறுகிய வட்டத்தில் ஆவண மா க முடிந்திருக்கும். அந்த கலவரம் நிகழ்காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் சொல்லும் செய் தி என்ன என்ற அளவில் இதைஎழுதியிருப்பதால் இது ஆவணம் என்ற நிலையைத் தாண் டி ஒரு புதிய ஆரம்பமாக இருக்கிறது.

இதுஇளைஞர்களுக்கான இலக்கியம். நம் தமிழ் இ ளைஞர்களுக்கு ஒரு வளரும் து றை யை அறிமுகப்படுத்த வேண்டும் என்பதற்காக பிக் டேட் டா என்ற பெருந்தரவு தொழில்நுட்பம் குறித்துவிரிவாக எழுதியிருக்கிறேன். கை ரேகை ச ட்டம் ஒழிந்தும் கை ரேகை அரசியல் ஒ ழியவில்லைஎன்பதை இந்த நாவல் வழி சொல்லியி ருக்கிறேன். ஆகோள் வெறும் புத்தக மல்ல. இது புத்தகவடிவில் ஓர் விழிப்புணர்வு இயக்க ம்.

விழாவில் சொல்வேந்தர் கம்பம் பெ. செல்வேந்திரன் நூலைப் பற்றிய அறிமுக உரை யை நிகழ்த்தினார். மருத்துவர் செல்வராஜ் வாழ்த்துரை வழங்கினார். விழாவின் முக்கிய நிக ழ்வாகஇருநூறு மாணவர்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப் பெற்று அவர்களுக்கு ஆகோள் புத்தகம்வழங்கப்பட்டது. தேனி மாவட்ட வெற்றித் தமிழர் பேரவையின் இளை ஞ ர் அணியைச் சேர்ந்த குணா, இராஜபாண்டியன், பிரபு தங்கம், வீரபாண்டியன், பால அரவி ந்த், கார்த்தி ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.