‘பி.ஆர்.கே சினி பர்த்டே காலண்டர்’ ராயல் பிரபாகர் தமிழ் சினிமா வி.ஐ.பி.களிடையே பிரபலமானவர்.

‘பி.ஆர்.கே சினி பர்த்டே காலண்டர்’ ராயல் பிரபாகர் தமிழ் சினிமா வி.ஐ.பி.களிடையே பிரபலமானவர்.

🌴கடந்த 14 வருடங்களாக தொடர்ந்து, சினிமாத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள் மற்றும் சினிமா பத்திரிகையாளர்களின் பிறந்தநாளன்று அவர்களுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பி மகிழ்விப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

🌴கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளாக கோயிலுக்குச் சென்று பிறந்தநாள் காண்பவரின் பெயரில் அர்ச்சனை செய்வதையும் தொடர்கிறார்.

🌴சிலர் இவரின் அன்பிற்காக அர்ச்சனையின் போது நேரில் வருவதும் உண்டு. சமீபத்தில் நடிகர் யோகிபாபு கூட அப்படி வந்திருந்து ராயல் பிரபாகரை மனதாரப் பாராட்டியிருந்தார்.

🌴ராயல் பிரபாகர் தனது நற்பணியின் அடுத்தகட்டமாக, திரையுலகப் பிரபலங்கள், பத்திரிகையாளர்களின் பிறந்தநாளன்று அவர்களைச் சந்தித்து, மரக்கன்று வழங்கி அதை அவர்களின் வசிப்பிடத்தில் நடச்செய்கிற முயற்சியைத் தொடங்கியிருக்கிறார். இந்த நற்செயலை இயக்குநர் சீனு ராமசாமி அவர்கள் கடந்த 13.10.2020 அன்று தொடங்கி வைத்தார்.

🌴அதன் தொடர்ச்சியாக, 15.10.2020 அன்று பிறந்தநாள் காணும் இசையமைப்பாளரும், நடிகை ஜெயசித்ராவின் மகனுமாக அம்ரிஷ் அவர்களைச் சந்தித்து மரக்கன்று வழங்கி, நடச் செய்து வாழ்த்து தெரிவித்தார்.