திரிபுரா மாநிலத்தில் உள்ள கொரோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த

திரிபுரா மாநிலத்தில் உள்ள கொரோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த

திரிபுரா மாநிலத்தில் உள்ள கொரோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இரண்டு சிறுமிகளை அங்குள்ள துப்புரவுப் பணியாளர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திரிபுரா மாநிலம் உனகோட்டி மாவட்டத்தில் உள்ள குமர்காட்டில் கொரோனா மருத்துவமனை ஒன்று அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் கடந்த வாரம் 17 வயது மதிக்கத்தக்க இரண்டு சிறுமிகள் கொரோனா பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து இந்த மருத்துவமனையில் அனும திக் கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நி லையில் அங்கு துப்புரவுப் பணியாளராக பணியாற்றிவரும் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த இரண்டு சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து மருத்துவர்களிடம் சிறுமிகள் தெரிவித்ததை தொடர்ந்து காவல்து றைக்கு புகார் அளிக்கப்பட்டது. இதனை அடுத்து அங்கு வந்த காவல்துறையினர் துப்புர வுப்பணியாளர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தற்போது அந்த நபரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் விசாரணை முடிந்தவுடன் அவர் கைது செய்யப்படுவார் என காவல்துறையினர் தெரிவித்தனர்