தற்காப்புகலை சாதனை இரட்டையர்களுக்கு ராஜ கலைஞர் விருது

தற்காப்புகலை சாதனை இரட்டையர்களுக்கு ராஜ கலைஞர் விருது

புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த காரைக்காலில் உள்ள  இன்டர்நேஷ்னல் வி.ஆர்.எஸ் மார்யல் ஆர்ட்ஸ் அக்டமி ( International Vrs Martial Arts Academy )  இயக்குனர் மகாகுரு Dr வி.ஆர்.எஸ்  குமாரிடம் மூன்று வயது முதல் கராத்தே சிலம்பம் யோகா கிக் பாக்ஸிங் குபுடோ தேக்வாண்டோ போன்ற எண்னற்ற தற்காப்பு கலைகலை கற்று இந்தியா மற்றும் சர்வதேச அளவில் 200க்கும் மேற்பட்ட பதக்கங்களை வாங்கி உலகிலேயே இரட்டையர்கள் முதன்முதலாக 9 வயதுக்குள்  கராத்தேவில் இரண்டு பிளாக் பெல்ட் மற்றும் இந்தியா மற்றும் சர்வதேச அளவில் அதிக பதக்கங்களை வாங்கி உலக சாதனை படைத்து பல்வேறு உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்து புதுச்சேரி ஆளுநர் . முதல்வர்   மற்றும் பல்வேறு தரப்பினரிடமும் பாராட்டு மற்றும் கவுரவ டாக்டர் பட்டம் மற்றும் பல்வேறு விருதுகளைப் பெற்றவர்கள் .

            காரைக்கால் குட்ஷெப்பட் மேல்நிலை பள்ளியில் ( Good Shepherd English School ) 7ம் வகுப்பு பயி லும்  இர ட்டையர்களான கே.ஸ்ரீவிசாகன் ( srivishakan) வய து 11 ம ற்றும்  கே ஸ்ரீஹரிணி ( sriharini )  வயது 11 இ வர்களை சிறப்பிக்கும் வி தமாக பள்ளி த் தாளா ளர் ரா ன்சன் தாமஸ் முதல் வர் ஜாய் தாமஸ்  ஆகியோர் இவர்களின் பல்வேறு சாதனைகளை பள்ளியின் சார்பாக  புத்தகமாக தயார்செய்து புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி அவர்களின் கைகளால் வெளியிட்டனர்  மேலும் இவர்கள்  சாதனைக்கு  மகுடம் சேர்க்கும் விதமாக திருச்சி தேவர் கலையரங்கத்தில் தமிழக கல்வித்துறை அமைச்சர் மகேஷ் அன்பில் பொய்யாமொழி அவர்கள் தலைமையில் தமிழகப் பண்பாட்டுக் கழகத்தால் ராஜ கலைஞர் விருது வழங்கப்பட்டது

மேலும் நிகழ்ச்சியில் பிரபல பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனி திரைப்பட நடிகர் போஸ் வெங்கட் திரைப்படம் மற்றும் நாட்டுப்புற பாடகர்கள் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி சின்னத்திரை வெள்ளித்திரை நடிகை ஸ்ரீ துர்கா கௌதம் மற்றும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு ராஜ கலைஞன் விருது வழங்கப்பட்டது இவ்விழாவை தமிழக பண்பாட்டுக் கழகத்தின் மாநில தலைவர் ஜாகிர் உசேன் அவர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்தார்.