‘சுழல்= தி வோர்டெக்ஸ்’ வலைத்தளத் தொடரின் முன்னோட்டம் வெளியீடு

‘சுழல்= தி வோர்டெக்ஸ்’ வலைத்தளத் தொடரின் முன்னோட்டம் வெளியீடு

முப்பது மொழிகளில் வெளியாகும் தமிழ் வலைதள தொடர் ‘ சுழல் – தி வோர்டெக்ஸ்’.

16 ஆண்டுகளுக்கு பிறகு ‘சுழல் – தி வோர்டெக்ஸ்’ மூலம் மீண்டும் நடிக்கும் ஸ்ரேயா ரெட்டி

இயக்குநரும், நடிகருமான ஆர். பார்த்திபன், கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி உ ள்ளிட்ட பலர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘சுழல்= தி வோர்டெ க் ஸ்’ எனும் அமேசான் பிரைம் வீடியோவில் ஜூன் 17 ஆம் தேதி முதல் வெளியாகும் வ லை தள தொடரின் முன்னோட்டம் வெளியானது.

‘விக்ரம் வேதா’ புகழ் இயக்குநர்கள் புஷ்கர் – காயத்ரி அவர்களின் சொந்த பட தயாரிப்பு நிறுவனமான வால் வாட்சர் பிலிம்ஸ் எனும் நிறுவனத்தின் சார்பில் தயாராகியிருக்கும் முதல் வலைதளத் தொடர் ‘ சுழல்- தி வோர்டெக்ஸ்’. இயக்குநர்கள் பிரம்மா மற்றும் எம். அ னுசரண் இயக்கத்தில் தயாராகியிருக்கும் இந்த வலைதள தொடரில் நடிகர்கள் ஆர். பார் த்திபன், கதிர், சந்தானபாரதி, பிரேம், நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி, நி வேதா சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மியூக்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இ ந்த வலைதள தொடருக்கு, சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார். அமேசான் பிரைம் வீடி யோவில் ஜூன் 17 தேதி முதல் வெளியாகும் ‘சுழல்- தி வோர்டெக்ஸ்’ என்ற க்ரைம் இன்வெ ஸ்டிகேட் திரில்லர் தொடரின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. இதற்காக சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பிரம்மாண்டமுறையில் வெளியீட்டு விழா நடைபெற்றது. இ ந்த விழாவில் அமேசான் ஒரிஜினல்ஸ் தலைவர் அபர்ணா புரோகித், அமேசான் இந்திய த லைவர் சித்தானந்த் ஸ்ரீராம், புஷ்கர்= காயத்ரி, அனுசரண், பிரம்மா, ஆர். பார்த்திபன், கதி ர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி ஆகியோருடன் படக்குழுவினரும், படத்தில் பணி யாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களும் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் அமேசான் இந்திய தலைவர் சித்தானந்த் ஸ்ரீராம் பேசுகையில், ” அமேசான் பிரைம் வீடியோவில் முதன்முதலாக இந்திய கதைகள், சர்வதேச மொழிகளில் வெளி யா கிறது. தமிழ் மண்ணில் நடைபெறும் கதையொன்று, அதன் நிலவியல் எல்லைகளைக் கட ந்து, மொழிகளைக் கடந்து, சர்வதேச அளவில் பார்வையாளர்களைச் சென்றடைவதில் மி க்க மகிழ்ச்சி அடைகிறோம். திறமையான படைப்பாளிகள் குழுவாக இணைந்து உருவா க்கியிருக்கும் ‘ சுழல்- தி வோர்டெக்ஸ்’ எனும் வெப் சீரிஸ் ஜூன் 17ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் வெளியாகிறது. அதற்கான முன்னோட்டத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சி அ டைகிறோம்.” என்றார்.

அமேசான் பிரைம் ஒரிஜினல்ஸ் தலைவர் அபர்ணா புரோகித் பேசுகையில், ” அமேசான் ஒரிஜினல்ஸ் வெளியிடும் முதல் தமிழ் வலைதள தொடர் ‘சுழல்= தி வோர்டெக்ஸ்’ . இயக்கு நர்கள் புஷ்கர் & காயத்ரி இந்த தொடரின் கருவை எங்களிடம் சொன்னபோது உண்மை யில் மிக்க மகிழ்ச்சி அடைந்தோம். அவர்களுடன் இணைந்து பணியாற்ற தொடங்கி னோ ம். கதையும், கதை சம்பவங்களும் தமிழக மண்ணில் நடந்தாலும், கதையின் மையப்புள் ளி சர்வதேச அளவிலான பார்வையாளர்களுடன் எளிதாக தொடர்பு கொள்ள முடியும் என் பதால் ஒப்புக்கொண்டோம். மேலும் இந்த தொடரில் வரும் கதாபாத்திரங்கள், உறவுக ள், உணர்வுகள் என அனைத்தும் உலகத்திலுள்ள அனைத்து மக்களுக்குமானது. இந்த தொ டர் குறிப்பிட்ட புவியியல் எல்லைகளை கடந்து, பல மொழிகளில் முதன் முதலாக வெளி யாகிறது. முப்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில், 240க்கும் மேற்பட்ட நாடுகளில் முதன் மு தலாக தமிழில் தயாரான தொடர், அமேசான் ப்ரைமில் வெளியாகிறது. இதன் மூலம் நம் முடைய இயக்குநர்களின் படைப்பு, சர்வதேச அளவிலான பார்வையாளர்களை சென்ற டையும். இந்த தொடரின் முன்னோட்டத்தை அபுதாபியில் நடைபெற்ற திரைப்பட விழாவி ல் வெளியிட்ட போதும் பெரும் வரவேற்பு கிடைத்தது’.’ என்றார்.

புஷ்கர் & காயத்ரி பேசுகையில், ” இந்த தொடரின் கருவை மட்டும் தான் நாங்கள் முதலில் மும்பையில் இருந்த அமேசான் ஒரிஜினல்ஸ் தலைவரான அபர்ணா புரோகித்திடம் தெரி வித்தோம். கேட்டு முடித்ததும், இதுதான் அமேசானின் முதல் தமிழ் ஒரிஜினல்ஸ் தொடர் என உறுதியளித்தார். அந்த தருணத்தில் எங்களிடம் ஏற்பட்ட நம்பிக்கை, தற்போது வரை பொறுப்புணர்வுடன் கூடிய தன்னம்பிக்கையாக வளர்ந்துகொண்டே இருக்கிறது.

‘விக்ரம் வேதா’விற்கு பிறகு எங்களை சந்திக்கும் பலரும், அடுத்து என்ன? என்ற வினாவை முன் வைப்பார்கள். அவர்களுக்கு இந்த தொடர் தான் சரியான பதிலாக இருக்கும். மூன்றா ண்டு காலமாக இதன் திரைக்கதையை எழுதி, உருவாக்கியிருக்கிறோம். இந்த தொடர் மு தலில் இந்திய மொழிகளில் வெளியாகும் என தெரிவித்தனர். தற்போது அ தை யும் கடந்து முப்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகும் என அறிவித்து, எங்களுக்கு இன்ப அ திர்ச்சி கொடுத்துள்ளனர். இந்தத் தொடரை இயக்கிய இயக்குநர்கள் அனுசரண் மற்றும் பிரம்மா, நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் இணைந்து கடு  மையாக உழைத்து இதனை உருவாக்கி இருக்கிறார்கள்.

தமிழ் திரை உலகில் பெரும்பாலும் கதாசிரியர்களே இயக்குனர்களாகவும் இருக்கிறார் கள். ஆனால் நாங்கள் இந்தத் தொடருக்காக கதை எழுதி, இயக்குவதற்காக இயக்குநர்கள் அனுசரண் மற்றும் பிரம்மாவை கேட்டுக் கொண்டபோது, உடனடியாக அவர்கள் ஒப்புக் கொண்டார்கள். இதற்காக அவர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்ற பாணி தமிழ்த்திரையுலகில் இல்லை. இதனை தொடங்கி வை த்த இயக்குநர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நடிகர்கள் கதிர், பார்த்திப ன், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி என அனைவரும் தங்களுடைய ஒத்துழைப்பை முழு மையாக வழங்கினார்கள்.

இந்தத் தொடரின் கதையை திரைப்படத்திற்கு எழுதுவது போல் வில்லன், கதாநாயகன், கதாநாயகி என எழுதவில்லை. எழுத எழுத எழுதிக்கொண்டே இருக்கிறோம். ஒரு புள்ளி யில் கதாபாத்திரங்களை கடந்து கதை நிகழும் நகரம் கூட கதாபாத்திரமாக மாறியது. இதை படமாக எடுக்க வேண்டுமென்றால்.. ஏழு எட்டு மணி நேரம் தேவைப்படும். அதனால் அதனை எழுதி தனியாக வைத்து விட்டோம். அதனை அமேசான் ‘சுழல்= தி வோர்டெக்ஸ்’ எனும் எட்டு அத்தியாயங்களைக் கொண்ட வலைத்தளத் தொடாராக உருவாக்கியிருக்கி றது.”என்றார்.

நடிகர் கதிர் பேசுகையில், ” இந்த தொடரில் நடிக்கும் போது, இந்த தொடர் உலகம் முழுவ தும் 30 க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் பணியாற்றவில் லை. நம்முடைய கதையை உலகத்தில் உள்ள பலரும், அவர்களுடைய இடத்தில்.. அவர்களு டை ய மொழியில்.. பார்க்க முடியும் என்றால் அது பெருமகிழ்ச்சி. இந்த தொடரில் இடம் பெறறிருக்கும் கதாபாத்திரங்கள், சம்பவங்கள்.. அனைத்தும் நம் மண் சார்ந்தவை. ஆனா ல் இவை சர்வதேச பார்வையாளர்களும் ஏற்றுக் கொள்ளும் வகையில் உருவாகி இருக்கிற து. இந்தப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறேன்.

‘பரியேறும் பெருமாள்’ என் திரையுலக வாழ்க்கையில் முக்கிய திருப்புமுனையை ஏற்ப டுத்திய படம். அதனையடுத்து என் திரையுலக பயணத்தில் அடுத்த கட்டத்தை நோக்கிய வளர்ச்சியை ஏற்படுத்திய தொடர் ‘சுழல்’. இதற்காக தயாரிப்பாளர்கள் புஷ்கர் & காயத்ரி மற்றும் அமேசானுக்கு என்றென்றும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தொடர் குறித்து அமேசான் குழுவினர் வெளிப்படுத்தும் தன்னம்பிக்கை, எங்களை மேலும் உற்சா கப்படுத்தி வருகிறது. ஜூன் 17ஆம் தேதி முதல் ‘ சுழல்’ தொடர் மூலம் நாங் கள் வெவ்வேறு மொழி பேசி பார்வையாளர்களை சென்றடைவதில் மகிழ்ச்சி அடைகி றோம்.” என்றார்.

இயக்குநர் பிரம்மா பேசுகையில், ‘‘ இந்த தொடரின் முதல் நான்கு அத்தியாயங்களை இய க்கியிருக்கிறேன். தொடரை இயக்குவதற்கு முன் தயாரிப்பாளர்களான புஷ்கர் & காயத்ரி, ஒளிப்பதிவாளர், கலை இயக்குனர் என தொழில்நுட்ப கலைஞர்களுடன் நீண்ட விவாதம் நடத்தி, தெளிவான திட்டமிடலையும் உருவாக்கிக் கொண்டோம். இந்த விவாதத்தின் ஊ டாக கதாசிரியர்கள் எந்த புள்ளியை சர்வதேச அளவிலான பார்வையாளர்களுக்கு புரிய வைக்க வேண்டும் என்று எழுதினார்களோ.. அதனை நாங்கள் முதலில் தெளிவாக உட்கி ரகித்தோம்.” என்றார்.

இயக்குநர் அனுசரண் பேசுகையில், ” இந்த தொடரின் இறுதி நான்கு அத்தியாயங்களை நான் இயக்கி இருக்கிறேன். நான் திரைப்படங்களை எழுதி, இயக்கியிருக்கிறேன். ஆனால் தொடர் இயக்குவது முதல் முறை என்பதால், இதுகுறித்த புரிதலுக்காக நீண்ட நேரம் பல வி சயங்களை தேடி தெரிந்து கொண்டேன். ஏனெனில் இந்தத் தொடரை நேர்த்தியாக இய க்க வேண்டும் என்று விரும்பினேன். அத்துடன் தயாரிப்பாளர்களான புஷ்கர் & காயத்ரி என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என்ற கடமையும் எனக்கு இருந்தது. இந்தத் தொடரை இயக்கத் தொடங்கிய பிறகு மிகப்பெரிய பொறுப்புணர்வை உணர்ந்தேன். எதிர்காலத்தில் வேறு சில திறமையான இயக்குநர்களுக்கும் இது போன்ற வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்றும் எண்ணினேன். ” என்றார்.

நடிகர் ஆர் பார்த்திபன் பேசுகையில், ” 32 ஆண்டு கால திரையுலக வாழ்க்கையில் சௌ கரியமான முறையில் ஒரு படைப்பில் பணியாற்றி இருக்கிறேன் என்றால், அது இந்த சு ழல் தொடரில் தான். நான் முதன் முதலில் நடிக்கும் வலைதள தொடர் இது. படப்பிடிப்பு நெருங்கும் தருணத்தில் என்னைத் தொடர்பு கொண்டு புஷ்கர் & காயத்ரி பேசினார்கள். அவர்களது இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். இந்தத் தொ டரின் கதையை கேட்டவுடன் அதில் ஒரு ஜீவன் இருந்ததை உணர்ந்தேன்.

நம்முடைய கலாச்சாரத்தில் ஒரு புராணக்கதை உண்டு. ஞானப்பழம் யாருக்கு என்ற அநத கதையில், ஞான பழத்திற்காக முருகன் உலகமெல்லாம் சுற்ற சென்று விடுவார். விநாய கர் அருகிலிருக்கும் அப்பா, அம்மாவை சுற்றிவிட்டு, ஞானப்பழத்தைப் பெற்றுவிடுவார். அந்த விநாயகர் கதைதான் அமேசானின் கதை.

அந்தக் காலத்தில் சிவாஜியை விட மிகச் சிறந்த நடிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர் க ளுடைய நடிப்பு பெரும்பாலானவர்களுக்கு தெரியாது. ஏனெனில் ஒவ்வொரு ஊராகச் சென்று நடிக்க வேண்டும். சென்னையில் அழகாக நடிக்க வேண்டும். பிறகு கோயம்பு த்தூ ருக்குச் சென்று மீண்டும் அதே போல் அழகாக நடிக்க வேண்டும். பிறகு மும்பைக்குச் சென் று அதே போல அழகாக நடிக்க வேண்டும். ஆனால் அமேசானில்.. ஒரே ஒரு தொடரில் நடித் தா ல், உலகத்தில் உள்ள 240 நாடுகளில் ஒரே நேரத்தில், இந்த தொடரைப் பார்க்க முடியு  மென்றால், இதுதான் அமேசானின் ஞானப்பழம். நம்முடைய படைப்பை உலக அளவில் ஒரே தருணத்தில் பார்த்து ரசிக்கிறார்கள் என்றால் அது மட்டற்ற மகிழ்ச்சி தானே.

ரெண்டு பொண்டாட்டியுடன் குடும்பம் நடத்துவது கடினம் என்பார்கள். ஆனால் இங்கு இரண்டு புருஷன்களுடன் குடும்பம் நடத்திய அனுபவம். ஆனால் வித்தியாசம் எதுவும் தெரியவில்லை. ஒரே ஆள் இரட்டை வேடம் போட்டது போல் இருந்தது. இந்த படத்தில் ப ணியாற்றிய இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞ ர்களையும், சந்தானபாரதி போன்ற கலைஞர்களையும் மனதார பாராட்டுகிறேன்.

இந்தத் தொடரில் சண்முகம் என்ற கதாபாத்திரத்தில் தொழிற்சங்க தலைவராகவும், ஒரு பெண்ணின் தகப்பனாராகவும் நடித்திருக்கிறேன். என் மகள் மீது வைத்திருக்கும் அன் பை யும், பாசத்தையும் வெளிப்படுத்த தெரியாது. எனக்கு நடிக்க தெரியாது அதனால் என்னுடைய நடிப்பு நன்றாக இருக்கும்.” என்றார்.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசுகையில், ” எனக்கு இயக்குநர்கள் புஷ்கர் & காயத்ரி மீது நல்ல மரியாதை உண்டு. ஏனெனில் அவர்கள் கலை மீது அளவற்ற பற்று கொண்டவர்கள். கொரோனா காலகட்டத்தின் போது என்னை அழைத்து வலைதள தொடரில் நடிக்க வே ண்டும் என கேட்டார்கள். நான் உடனே ஒப்புக்கொண்டேன். ஆனால் அந்த தொடர் இவ்வ ளவு பிரம்மாண்டமாக வெளியாகும் என சற்றும் எதிர்பார்க்கவில்லை.

இந்த தொடரில் நடிப்பதற்கு முன் என்னிடம் ஒரு புத்தகத்தை கொடுத்தார்கள். அதில் சில அத்தியாயங்களில் நான் இல்லை. அப்போது ஏன் இந்தத் தொடரில் என்னை தேர்வு செய் தா ர்கள்? என யோசித்தேன். ஆனால் கதை முழுவதும் படித்த பிறகு, என்னுடைய கதாபா த்திரத்தின் அழுத்தத்தை உணரமுடிந்தது. நந்தினி என்ற பிடிவாதம் கொண்ட பெண்ணா க அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். என் தங்கை காணாமல் சென்று வி டுவாள். அவளை தேடி நான் பயணப்படுவேன். கதையில் பல இடங்களில் நந்தினி, என் நிஜத்தை பிரதிபலித்திருப்பாள்.

நான் இதுவரை 30-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டேன். ஆனால் இந்த தொடரில் நடிக்கும் போது எனக்கு கிடைத்த சௌகரியங்களும், வசதிகளும் வேறு எங்கும், எப்போது ம் கிடைத்ததில்லை. அதனால் மிக சிறந்த அனுபவத்தை உணர்ந்தேன். படப்பிடிப்பு தளத் தி ல் பணியாற்றும்போது சக நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களும் நேர்மறையான அதிர்வை வெளிப்படுத்தி, முழுமையான ஒத்துழைப்பு வழங்கினர். அமேசன் குழுவினர் எங்களை தாய்போல் அரவணைத்தனர். அபுதாபியில் நடைபெற்ற திரைப்பட விழாவில் எங்களையெல்லாம் அபர்ணா மேடம், மற்றவர்களிடம் பெருமிதத்துடன் அறிமுகப் படு த்தி, கொண்டாடினார்கள். அதுவும் என்னால் மறக்க இயலாது. ” என்றார்.

இசையமைப்பாளர் சாம் சி எஸ் பேசுகையில், ” புஷ்கர் & காயத்ரி அவர்களின் திரைக் க தையில் ஒரு இசையமைப்பாளர் எதிர்பார்க்கும் அனைத்து விதமான உணர்வுகளும் இ டம்பெற்றிருக்கும். இந்த தொடரில் உள்ள எட்டு அத்தியாயங்களுக்கு இசை வடிவிலும் கதையை நகர்த்த இயலும் வகையில் திரைக்கதை அமைத்திருந்தார்கள். அது எனக்கு சவாலாக இருந்தது. ” என்றார்.

நடிகை ஸ்ரேயா ரெட்டி பேசுகையில், ” இயக்குநர்கள் புஷ்கர் & காயத்ரி தொடர்புகொண் டு ‘சுழல்’ பற்றி பேசி, என் கதாபாத்திரத்தைப் பற்றி விவரித்தார்கள். 16 ஆண்டுகாலத் திற் கு பிறகு இந்த தொடரில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறேன். இதற்கு ஒரு முக்கிய கார ண ம் புஷ்கர் &காயத்ரி, ‘இந்த தொடரில் எந்த இடத்திலும் ‘திமிரு’ படத்தினுடைய நடிப்பும் தோற்றமும் வந்து விடக் கூடாது’ என உறுதியாக கண்டிப்புடன் கூறி விட்டார்கள். ரெஜி னா என்ற போலீஸ் அதிகாரி வேடம் என்றாலும், பல இடங்களில் நடிப்பதற்கு சவாலாக இ ருந் ததால் நடிக்க ஒப்புக்கொண்டேன். இயக்குநர்கள் பிரம்மா, அனுசரண் படப்பிடிப்பு த ளத் தில் நேர்த்தியாக பணியாற்றி, நடிகர்களிடமிருந்து நடிப்பை பெற்றுக் கொண் டார் கள். ஒ ளிப்பதிவாளர் மியூக்ஸ் படப்பிடிப்புத் தளத்தில் சர்வதேச தரத்திலான பணியை வழ ங் கி எங்களையெல்லாம் ஆச்சரியப்படுத்தினார். படப்பிடிப்பு தளத்தில் என்னையும் சக நடி க ர்களையும் தொழில் நுட்பக் கலைஞர்களையும் அமேசான் குழுவினர் சௌக ரிய மாக ந ட த்தினார்கள். அதிலும் குறிப்பாக அமேசான் குழுவில் இருக்கும் அபர்ணா புரோ கித் அவ ர்கள் ஆச்சரியப்படும் தருணங்களைப் பற்றி புத்தகமே எழுதலாம். அவை அனை த்தும் த ன்னம்பிக்கையின் வெளிப்பாடுகள் என்பதே அதன் சிறப்பு. ‘சுழல்’ தொடர் ஜூன் 17ஆம் தேதி, முப்பது மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாவதில் மிக்க மகிழ்ச்சி.” என்றார்.