’ஒன் வே’ திரைப்பட விமர்சனம்

’ஒன் வே’ திரைப்பட விமர்சனம்

நடிகர், நடிகைகள்-;

பிரபஜன், கோவை சரளா, ஆரா, அப்துல்லா, சார்லஸ் வினோத் மற்றும் பலர் .

தொழில்நுட்ப கலைஞர்கள்-;

இயக்குனர் : எம்.எஸ்..சக்திவேல் ,  ஒளிப்பதிவு : முத்துக்குமரன்  , படத்தொகுப்பு : சரண் ச ண்மு கம் , இசை :  அஸ்வின் ஹேமந்த் , ஒலி கலவை :  அபிஷேக் தர்ஷன் , டி ஐ: கார்த்திக் சண்டை :  விக்கி , மக்கள் தொடர்பு: ஹஸ்வத் சரவணன் , தயாரிப்பு : ஜி குரூப் புரொடக் ஷன்ஸ் , தயாரிப்பா ளர் : ராஜாத்தி பாண்டியன் திரையரங்க வெளியீடு: அரோமா ஸ்டு டியோஸ் & சிம் சினி இன்டர் நேஷனல் மற்றும் பலர் .

திரை கதை-;

அம்மா கோவை சரளா, தங்கை ஆரா ஆகியோருடன் வாழ்ந்து வரும் ஹீரோ பிரபஞ்சன், சரியான வேலை கிடைக்காமல் கஷ்ட்டப்படுகிறார். விவசாயத்திற்காக வாங்கிய கடனு க்கான வட்டி ஒரு பக்கம் அதிகரிக்க, மறுபக்கம் நிரந்தரமான வேலை கிடைக்காமல் கி டைத்த வேலையை செய்துக்கொண்டிருக்கிறார் நாயகன் பிரபஞ்சன். இதற்கிடையே, வ ட்டிக்கு பணம் கொடுக்கும் வினோத் சார்லஸ், கடனை திருப்பி கொடுக்க முடியாத குடும் பத்தில் இருக்கும் பெண்களை தனது ஆசைக்கு இனங்க வற்புறுத்துகிறார். அவரால் பல பெண்கள் பாதிக்கப்பட, நாயகனின் தங்கை மீது அவர் கண் வைக்கிறார். கடனை கொ டுக்க வில்லை என்றால், பெண்ணை தன்னுடன் அனுப்பி வைக்க வேண்டும், என்று அடா வடி செய்யும் சார்லஸ் வினோத்தின் கடனை அடைப்பதற்காக நாயகன் பிரபஞ்சன் வெ ளிநாட்டுக்கு வேலைக்கு போக முடிவு செய்கிறார்.

அதற்காக தனது அப்பாவின் நினைவாக வைத்திருந்த தாலியை அம்மா கோவை சரளா விற்று அவரை வெளிநாட்டு வேலைக்கு அனுப்புகிறார்.வெளிநாட்டுக்கு வேலைக்கு போக வேண்டிய நாயகன் பிரபஞ்சன், எதிர்பாராத சில பிரச்சனைகளில் சிக்கிக்கொள்வதால் வெளிநாட்டுக்கு போக முடியாமல் மும்பையில் சிக்கிக்கொள்ள, அதே சமயம் கையில் வைத்திருந்த பணத்தை இழந்துவிட்டதால் சொந்த ஊருக்கும் போக முடியாமல் தவிக்கி றார்கடைசியில் கதையின் நாயகன் குடும்ப கடனை அடைக்க என்ன செய்கிறார் என்பது ம் இவர் ஊருக்கு திரும்பி சென்றாரா ? இல்லையா ? என்பதுதான் படத்தின் மீதி கதை

படத்தின் முன்னோட்டத்தை பார்க்கவும் -;

திரைப்பட விமர்சனம்-;

ஜி குரூப் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ராஜாத்தி பாண்டியன் தயாரிப்பில், எம்.எஸ்.சக்திவேல் இயக்கத்தில், பிரபஞ்சன், கோவை சரளா, ஆரா, அப்துல்லா, சார்லஸ் வினோத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் ‘ஒன் வே’. அம்மா கோவை சரளா, தங்கை ஆரா ஆகியோருடன் வாழ்ந்து வரும் ஹீரோ பிரபஞ்சன், சரியான வேலை கிடைக்காமல் கஷ்ட்டப்படுகிறார். வி வசாயத்திற்காக வாங்கிய கடனுக்கான வட்டி ஒரு பக்கம் அதிகரிக்க, மறுபக்கம் நிரந்த ர மான வேலை கிடைக்காமல் கிடைத்த வேலையை செய்துக்கொண்டிருக்கிறார் நாயகன் பிரபஞ்சன்.

இதற்கிடையே, வட்டிக்கு பணம் கொடுக்கும் வினோத் சார்லஸ், கடனை திருப்பி கொடு க்க முடியாத குடும்பத்தில் இருக்கும் பெண்களை தனது ஆசைக்கு இனங்க வற்புறுத்துகி றார். அவரால் பல பெண்கள் பாதிக்கப்பட, நாயகனின் தங்கை மீது அவர் கண் வைக்கி றார். கடனை கொடுக்க வில்லை என்றால், பெண்ணை தன்னுடன் அனுப்பி வைக்க வே ண்டும், என்று அடாவடி செய்யும் சார்லஸ் வினோத்தின் கடனை அடைப்பதற்காக நாயக ன் பிரபஞ்சன் வெளிநாட்டுக்கு வேலைக்கு போக முடிவு செய்கிறார். அதற்காக தனது அப் பாவின் நினைவாக வைத்திருந்த தாலியை அம்மா கோவை சரளா விற்று அவரை வெளி நாட்டு வேலைக்கு அனுப்புகிறார்.

வெளிநாட்டுக்கு வேலைக்கு போக வேண்டிய நாயகன் பிரபஞ்சன், எதிர்பாராத சில பிர ச்சனைகளில் சிக்கிக்கொள்வதால் வெளிநாட்டுக்கு போக முடியாமல் மும்பையில் சிக் கிக்கொள்ள, அதே சமயம் கையில் வைத்திருந்த பணத்தை இழந்துவிட்டதால் சொந்த ஊ ருக்கும் போக முடியாமல் தவிக்கிறார்.இந்த நிலையில், நாயகன் பிரபஞ்சனுக்கு பணம் சம்பாதிக்க ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. பணக்காரர்களால் அப்பாவிகளின் உயிரை வை த்து விளையாடப்படும் சூதாட்டமான அந்த போட்டியில் கலந்துக்கொள்பவர்களின் உயி ருக்கு ஆபத்து அதிகம் என்றாலும், அந்த விளையாட்டில் கலந்துக்கொள்ள நாயகன் முடிவு செய்கிறார். அதே சமயம், அந்த விளையாட்டை தடுக்க இண்டர்போல் போலீஸ் முயற்சியி ல் இறங்குகிறது. இறுதியில் நாயகன் அந்த போட்டியில் கலந்துக்கொண்டு வெற்றி பெற் றாரா? அல்லது உ யிரை விட்டாரா?, அந்த விளையாட்டு போட்டி என்ன? அதனை இண்டர் போல் போலீஸ் ஏன் தடுக்க நினைக்கிறது? என்பதை பரபரப்பாகவும்,விறுவிறுப்பாகவும் சொல்வது தான் ‘ஒ ன் வே’.கிராமத்தில் ஏழை விவசாய குடும்பத்தின் துயரங்கள், வட்டிக்கு பணம் கொடுப்ப வர்களின் அத்துமீறல்கள் என்று தொடங்கும் படம் இரண்டாம் பாதியில் நாம் எதிர்பார்க் காத அதே சமயம் நிஜத்தில் நடக்கும் சில அதிர்ச்சிகரமான தகவல்களோடு ஹாலிவுட் பட த்தை பார்த்த அனுபவத்தை கொடுக்கிறது.

நாயகனாக நடித்திருக்கும் பிரபஞ்சன், கிராமத்து கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொரு ந்துகிறார். தன் குடும்ப கஷ்ட்டத்தை போக்குவதற்காக பல வேலைகள் செய்பவர், தன் உ யிர் போனாலும் பரவாயில்லை என்று அந்த பயங்கர விளையாட்டில் ஈடுபட்டாலும், சக ம னிதர்களை கொல்ல மாட்டேன் என்று அவர் தடுமாறும் இடங்களில் பாராட்டும்படி நடித்தி ருக்கிறார்.நாயகனின் தங்கையாக நடித்திருக்கும் ஆரா, நம் பக்கத்து வீட்டில் இருக்கும் பெண் போல் இயல்பாக இருக்கிறார். அவருடைய நடிப்பும் ரொம்ப எதார்த்தமாக இருக் கி றது. கடன்காரர்களின் தொல்லைக்கு ஆளாகும் ஏழை பெண்களை பிரதிபலிக்கும்படி சிற ப்பாக நடித்திருக்கும் ஆராவுக்கு கோடம்பாக்கத்தில் நல்ல எதிர்காலம் உண்டு. நாயக னி ன் அம்மாவாக நடித்திருக்கும் கோவை சரளா, தன்னை மீண்டும் ஒரு முறை சிற ந்த குண ச்சித்திர நடிகை என்பதை நிரூபித்துள்ளார். வட்டிக்கு பணம் கொடுப்பவராக ந டித்திருக் கும் சார்லஸ் வினோத்தின் வேடமும், அவரது நடிப்பும் படம் பார்ப்பவர்களுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்துகிறது.மிக முக்கியமான வேடத்தில் நடித்திருக்கும் அப்து ல்லா க தாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பதோடு, அமைதியாக நடித்து பாராட்டு பெ றுகி றார். பவா செல்லதுறை உள்ளிட்ட படத்தில் நடித்திருக்கும் மற்ற நடிகர்களும் தங்களது வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.

முத்துக்குமரனின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்துள்ளது. முதல் பாதி யில் கிராமத்தின் அழகை கச்சிதமாக காட்சிப்படுத்தியிருப்பவர், இரண்டாம் பாதியில் படத்தின் கோணத்தையே மாற்றும் அளவுக்கு காட்சிகளை கையாண்டுள்ளார். குறிப்பாக உயிரை வைத்து விளையாடப்படும் போட்டியை காட்சிப்படுத்திய விதம் பதற வைக்கிற து.இசையமைப்பாளர் அஷ்வின் ஹேமந்தின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் விதமாகவும், புரியும் விதமாகவும் இருக்கிறது. பின்னணி இசை கதையோடு பயணிபப தோடு, ஒரே கதைக்களத்தில் இரண்டு வெவ்வேறு களங்களுக்கான பின்னணி இசையை மிக நேர்த்தியாக கொடுத்திருக்கிறார். படத்தொகுப்பாளர் சரண் சண்முகம் காட்சிகளை தொய்வில்லாமல் நகர்த்தி செல்கிறார். இரண்டாம் பாதியில் நடத்தப்படும் போட்டியை தொகுத்திருக்கும் விதம் படம் பார்ப்பவர் களை பயபப்ட வைத்திருக்கிறது.எழுதி இயக்கி யிருக்கும் எம்.எஸ்.சக்திவேல், பல உண் மை சம்பவங்களை மையமாக வைத்து திரைக்க தை அமைத்திருக்கிறார். குறிப்பாக வி வசாயிகள் மட்டும் அல்ல அவர்களது குடும்பமும் எத்தகைய துயரத்தோடு வாழ்கிறது என் பதை முதல் பாதியில் மிக அழுத்தமாக பதிவு செ ய்திருக்கிறார்.

பணம் படைத்தவர்களின் பொழுதுபோக்கு ஏழைகளின் உயிரை எப்படி காவு வாங்கு கிற து, என்பதை இரண்டாம் பாதியில் சொல்லியிருக்கும் இயக்குநர் அந்த காட்சிகளை ஹா லி வுட் படங்களுக்கு நிகராக கையாண்டிருப்பது படத்தின் கூடுதல் பலம்.இப்படி எல்லாம் இங்கு நடக்கிறதா? என்று படம் பார்ப்பவர்களை ஆச்சரியப்படுத்துவதோடு, அடுத்தது எ ன்ன நடக்கும்? என்ற எதிர்பார்ப்போடு சீட் நுணியில் உட்கார்ந்து பார்க்கும் வகையில் இர ண்டாம் பாதியை படு விறுவிறுப்பாக இயக்குநர் நகர்த்தி செல்கிறார். நடிகர்களை கை யாண்ட விதம், இசை, ஒளிப்பதிவு உள்ளிட்ட தொழில்நுட்ப ரீதியாக படம் மிக தரமாக இரு ப்பதோடு, ஒரு புதிய விஷயத்தை மிக வித்தியாசமாகவும் அதே சமயம், அதை விவசாய த் தின் பின்னணியில் சொல்லியிருப்பதோடு, விறுவிறுப்பான சஸ்பென் ஸ் த்ரில்லர் ஜான ரில் சுவாரஸ்யமாக சொல்லியிருக்கும் இயக்குநர் எம்.எஸ்.சக்தி வேலுக் கு கோடம்பாக்க ம் சிவப்பு கம்பளம் விரிப்பது உறுதி.

இது என் தனிப்பட்ட விமர்சனம் எனவே தயவு செய்து திரையரங்குக் சென்றுற் திரை ப்பட த்தை பார்க்கவும்.

எழுதியவர் – டி.ஹெச்சு பிரசாத்- பி 4 யு மதிப்பு – 2.5 / 5