அன்று எனது பிறந்தநாளை முன்னிட்டு எனக்கு நேரிலும், அலை பேசியிலும் வாழ்த்திய அன்பு நெஞ்சங்கள்

 அன்று எனது பிறந்தநாளை முன்னிட்டு எனக்கு நேரிலும், அலை பேசியிலும் வாழ்த்திய அன்பு நெஞ்சங்கள்

அன்புடையீர் காலை வணக்கம்,

 அன்று எனது பிறந்தநாளை முன்னிட்டு எனக்கு நேரிலும், அலை பேசியிலும் வாழ்த்திய அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் எனது நன்றி வணக்கத்தை தாழ்பணிந்து தெரிவி த்துக் கொள்கிறேன். சாதாரண எளிய குடும்பத்தில் பிறந்து எளிய வாழ்க்கை வாழும் நான் கடந்த சில வருடங்களுக்கு முன்னாள் என் பிறந்த நாள் என்று என்பது கூட எனக்கு ஞாபகம் வராது, எங்கள் வீட்டிலும் தெரியாது, யாரும் அதை கொண்டாடியதும் கிடை யாது. ஆனால் தற்போது தகவல் தொழில் நுட்ப காலம். எல்லோரும் எல்லாவற்றையும் தங்கள் கைகளிலேயே அறிந்து கொள்ளும் இன்டர்நெட் வசதி வந்துவிட்டது. அதன் காரணமாக எனது பிறந்த நாளை தெரிந்து கொண்டு என்னை திக்குமுக்காட வைக்கும் வகையில் என் வீட்டிற்கு அதிகாலை முதல் இரவு வரை தொடர்ந்து வந்து வாழ்த்து சொ ன்னீர்கள். மாண்புமிகு முதல்வர் அண்ணன் EPS அவர்கள் சொன்னது போல் நானும் பழி பாவங்களுக்கு அஞ்சுபவன். கட்சி, எனது விருகம்பாக்கம் தொகுதி மற்றும் நம் தாய்நாட்டிற்கு பெருமை மற்றும் புகழ் சேர்க்கும் வகையில் தான் நான் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறேன். இனியும் அப்படி தான் செயல்படுவேன் என்று கூறி கொண்டு வாழ்த்திய அன்பு நெஞ்சகளுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் 

இந்த நேரத்தில் எனக்கு எல்லா சிறப்பையும் ஏற்படுத்தி கொடுத்த எனது பெற்றோ ர்கள்,ஆசிரியர்கள், பள்ளி தோழர்கள், நண்பர்கள், கழக தோழர்கள், கழக நிர்வாகிகள், விருகம்பாக்கம் தொகுதி பொதுமக்கள் மற்றும் எந்த ஆதரவும் இல்லாத எளியவனான நான் அரசியலில் படி படியாக வந்த போது, எனது உழைப்பை அறிந்து என்னை மிக உயர்ந்த இடத்தில் அமர வைத்து அழகு பார்த்த எனது தாய் இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களை நினைத்து நன்றி கூறி வணங்கி எல்லோருக்கும் இந்த நாள் இனிய நாளாக அமைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் 

பணிவுடன்,
விருகை V.N .ரவி.,
உங்கள் சட்ட மன்ற உறுப்பினர்,
விருகம்பாக்கம் சட்ட மன்ற தொகுதி,
கழகத்தின் தென் சென்னை தெற்கு மாவட்ட செயலாளர்.