அன்போடு அழைக்கப்பட்ட மரியாதைகுரிய திரு. விஜயகாந்த் அவர்களுக்கு கொரோனா தொற்று

அன்போடு அழைக்கப்பட்ட மரியாதைகுரிய திரு. விஜயகாந்த் அவர்களுக்கு கொரோனா தொ ற்று

தமிழ் திரையுலகில்  அனைவராலும் “புரட்சிக்கலைஞர்” என்று அன்போடு அழைக் கப் பட்ட மரியாதைகுரிய திரு. விஜயகாந்த் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய் யப்பட்டதையறிந்து மனம் வேதனையடைந்தேன்.

திரைத்துறைக்கு வருபவர்கள் யாரையாவது ஒருவரை முன்மாதிரியாகக் கொண்டுதான் சென்னைக்கு புறப் படுவார்கள். “சிவப்பு மல்லி” என்கிற ஒரு நெருப்பான படைப்பை பார் த்தும் அதில் நாயகனாக நடித்த  திரு. விஜயகாந்த் அவர்களை முன்மாதிரியாகக் கொ ண் டும்தான் நான் திரைத்துறைக்கு வந்தேன்.

தனிப்பட்ட முறையில் என் மீது பேரன்பு கொண்டவர் திரு. விஜயகாந்த் அவர்கள். எல் லோ ரிடமும் வித்தி யாசமின்றி பழகும் திரு. விஜயகாந்த் அவர்கள் இந் நோய் தொற் றிலிருந்து  விரைவில் மீண்டு வந்து சமூக பணியாற்றிட இயற்கையையும் இறையையும் வேண் டுகிறேன்.

வ.கௌதமன்
பொதுச் செயலாளர்,
தமிழ்ப் பேரரசு கட்சி,
“சோழன் குடில்”
24:09:2020
சென்னை.