ஸ்டெர்லைட் ஆலைக்கெதிரான போராட்டத்தை பற்றிய  புலனாய்வு படம் PEARLCITY

ஸ்டெர்லைட் ஆலைக்கெதிரான போராட்டத்தை பற்றிய  புலனாய்வு படம் PEARLCITY

ஸ்டெர்லைட் ஆலைக்கெதிரான போராட்டத்தை பற்றிய  புலனாய்வு படம் PEARLCITY
MASSACRE (முத்துநகர் படுகொலை)*

2017 ஆம் ஆண்டு ஜனவரியில் ஜல்லிக்கட்டு தடையை கண்டித்து தமிழகம் மட்டுமின்றி 
உலகெங்கும் நடந்த போராட்டத்தை நாச்சியாள் பிலிம்ஸ் நிறுவனம் ‘மெரினா புரட்சி’ எ ன்ற ஆவணத்திரைப்படமாக தயாரித்திருந்தனர். M.S.ராஜ் இயக்கியிருந்தார். கடும் போ ராட்டத்திற்குப் பிறகு தணிக்கை பெற்ற ‘மெரினா புரட்சி’ நார்வே,கொரிய திரைப்பட வி ழாக்களில் விருது பெற்றது.

தற்போது நாச்சியாள் பிலிம்ஸும் தருவை டாக்கீஸும் இணைந்து 20 18 மே மாதம் 22 & 23 தேதிகளில் தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் ஆலைக்கெதிரான போராட்டத்தை PEARLCITY MASSACRE (முத்துநகர் படுகொலை) என்ற பெயரில் புலனாய்வு ஆவணப்படமாக தயா ரித் துள்ளனர்.மெரினா புரட்சியை இயக்கிய M.S.ராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார்.

மேலும் படத்தை பற்றி இயக்குனர் M.S.ராஜ்..

“PEARLCITY MASSACRE(முத்துநகர் படுகொலை) புலனாய்வு ஆவ ண த்திரைப்படம் உண் மை யில் மே22 & 23 தேதியில் நடந்த கொடூர சம்பவங்களை சாட்சி யங்களுடன் பதிவு செ ய்தி ருக்கிறது. மேலும் அரச இயந்திரம் செய்த தவறுகளை ஆதா ரங்களுடன் டமாக்கியுள்ளது.

.துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களின் குடும் பத்தினருக்கு இந்த ஆவணப்படத்தை திரை யிட்டோம்.வழியும் கண்ணீரை துடைத்த படி யே படத்தை பாராட்டியவர்கள்  விரைவில் நீதி வழங்க வேண்டும் என்று கோரி கையெ ழுத் திட்டனர். தமிழகம் மட்டுமின்றி உலகெங்கும் (32 நாடுகளில்) இந்த படத்தை திரையிட்டு பா ர்வையாளர்களின் கையெழுத்துக்களை திர ட்டி தமிழக அரசிடம் வழங்க இருக்கி றோ ம்.  நீதி கோரும் எங்களின் இந்த முயற்சிக்கு, இ ந்த பயணத்திற்கு ஊடகவியலாளர்களின் ஆதரவை பணிவுடன் வேண்டுகிறோம்.” என கேட்டுக்கொண்டார்.