மனிதா கேள் இயற்கையின் குரலை: ‘நீயே பிரபஞ்சம் ‘இதோ ஓர் புதுமை ஆல்பம்!

‘நீயே பிரபஞ்சம் ‘ இயற்கை பாடும் எச்சரிக்கை கீதம்:

மனிதா கேள் இயற்கையின் குரலை: ‘நீயே பிரபஞ்சம் ‘இதோ ஓர் புதுமை ஆல்பம்!

மனிதன் இயற்கையைப் புறக்கணித்து தீங்கு செய்வதைக் கண்டித்தும் எச்சரித்தும், இய ற்கை மனிதர்களுக்குப் பாடுவதாக ஓர் ஒற்றைப் பாடல் ஆல்பம் உருவாகி யிருக் கிறது. இ தை இசையமைப்பாளர் தன்ராஜ் மாணிக்கம் உருவாக்கியிருக்கிறார். அவர் வெ ண்ணி லா வீடு, சோன்பப்படி, டீக்கடை ராஜா, விசிறி, நிழல் உலகம், ரிங் ரோடு (கன்னடம்), ரகு, கீழக்காடு ஆகிய திரைப்படங்களின் இசையமைப்பாளர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட குறும் படங்களுக்கும், விளம்பரப் படங்களுக்கும் இசை அமைத்துள்ளார்.

“நீயே பிரபஞ்சம்” இந்த ஒற்றைப் பாடல் முயற்சி பற்றி அவர் பேசும் போது,

“இது என் குழு படைப்பு. இந்தப்பாடல் எதைச் சார்ந்தது என்றால், வெகுநாட்களாகவே இய ற்கையை மனிதர்களாகிய நாம் இழிவு செய்து கொண்டே இருக்கிறோம்; சேதப் படுத்தி கொண்டே இரு க்கிறோம்;எல்லாமும் நமக்கு வழங்கிய இயற்கையை ஒரு பொ ரு ட்டாக மதிப்பதே இல்லை. பல வகையிலும் இயற்கைக்கு எதி ரா கவும் இருக்கிறோம். இறைவன் இயற்கையையும் உயிரி னங் களையும் படைத்தான். மனிதன் படைத்தவனை உதாசீ னப் படுத்தி, இயற்கையையும் உயிரினங்களையும் கொடுமை செய் கிறான், கொலை செய் கிறான், மாசு படுத்துகிறான், தான் இயற் கையுடன் சார்ந்து வாழ்வதை மறந்து, செயற்கை வழியில் செ ன்று மிருகமாக மாறிவிட்டான்.அனைத்து உயிர்களுக்கும் இயற்கைக்கும் அநீதி செய் கிறா ன்.அவனுக்குத் தெரியாது, இயற்கை ஒரு நாள் அவனை ‘வச்சு செய்யும்’ என்று.

தற்போது உலகமே முடங்கி கிடக்கிறது, மனித உயிர் இனங்களைத் தவிர மற்ற உயிரி னங்கள் அனைத்தும் மிக மகிழ்ச்சியாய், சுதந்திரமாய் இன்புற்று வாழ்கின்றன. தற்போது வந்திருக்கும் கொரோனா, மனித இனத்திற்கு ஓர் எச்சரிக்கை. தன்னிலை மறந்த மனி தனுக்கு, அதிரவைக்கும் ஒரு நினைவூட்டல். இனிவரும் காலங்களுக்கு இயற்கைக்குத் துணையாக மனித இனம் நிச்சயம் இருக்கும்.

தற்போது நான் இசையமைத்திருக்கும் இந்த பாடல், மேலே கூறிய அனைத்து கருத்து க ளும் உள்ளடங்கியது.” என்கிறார்.‘நீயே பிரபஞ்சம்’ என்கிற தலைப்பில் இதற்கான பா டல் வரிகளை பாடலாசிரியர் எஸ். ஞானகரவேல் எழுதி இருக்கிறார். ‘வானமாய் நின்று கை யசைத்தேன் பூமியால் உன்னை நான் அணைத்தேன் பச்சை இலைகளில் புன்ன கைத்தே ன்சென்றாய் என்னை புறக்கணித்தே’ என்று தொடங்குகிறது பாடல் .

‘கடவுளை நீ தினம் தேடியே அலைகிறாய் எங்கோ?

இயற்கையும் தெய்வமும் ஒன்றென நீ உணரும் நாள் என்றோ ?
என்று செல்கிற இப் பாடல்,
‘நீர் நிலம் காற்று நான்,
ஆகாயம் நெருப்பு நான் ,
பேரண்ட வெளிச்சம் நான்,
பிரபஞ்ச இருட்டும் நான்’ என்று விரிந்து செல்கிறது.

தன்ராஜ் மாணிக்கம் மேலும் பேசும்போது “இயற்கை கொடூரமாய் ஆடியதை பார்த்துள் ளோம், பார்த்துக்கொண்டு இருக்கிறோம். அதுவே, இயற்கை நமக்காக ஒரு பாடல் பா டி னால், எவ்வாறு இருக்கும்? அதுதான் இந்தப் பாடல் “நீயே பிரபஞ்சம்” இந்தப் பாடலை நா ன் இசையமைத்து பாடியும் உள்ளேன். மேலும் டிரெண்ட் மியூசிக் இப்பாடலின் உரி மைகளைப் பெற்றுள்ளது. மனிதனுக்கு தற்போது மிக அவசியமான கருத்துப் பாடல். “என் கிறார் திருப்தியுடன்.