பிரைம் வீடியோ வழங்கும் “தி வில்லேஜ்” சீரிஸின் டிரெய்லர் வெளியீட்டு விழா

பிரைம் வீடியோ வழங்கும் “தி வில்லேஜ்” சீரிஸின் டிரெய்லர் வெளியீட்டு விழா

பிரைம் வீடியோ வழங்கும், ஸ்டுடியோ சக்தி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில், B.S. ராதாகிருஷ்ணன் தயாரிப்பில், இயக்குநர் மிலிந்த் ராவ் இயக்கத்தில், நடிகர் ஆர்யா நடிப் பில், ஹாரர் திரில்லராக உருவாகியுள்ள “தி வில்லேஜ்” தமிழ் ஒரிஜினல் சீரிஸ் நவம்பர் 24 ஆம் தேதி வெளியாகிறது.

தமிழில் முதல் முழுமையான ஹாரர் திகில் ஒரிஜினல் சீரிஸாக, உருவாகியுள்ள “தி வில் லேஜ்” சீரிஸின் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்துகொள்ள கோலாகல மாக நடைபெற்றது.

இவ்விழாவினில்..

பிரைம் வீடியோ இந்தியா & தென்கிழக்கு ஆசியா, தலைவர் அபர்ணா புரோஹித் பேசி யதாவது..
பிரைம் வீடியோ மூலம் தி வில்லேஜ் சீரிஸை உங்கள் முன் அறிமுகப்படுத்துவது மிகப்பெ ரிய மகிழ்ச்சி. இந்த சீரிஸ் மூலம் எங்கள் பார்வையாளர்களை அடுத்த கட்டத்திற்கு அழை த்து செல்ல உள்ளோம். இந்த சீரிஸ் ஒரு மறக்க முடியாத பயணம். மிக உணர்வுப்பூர்வ மா ன பயணம். 4 வருடங்கள் முன் ஆரம்பித்தது. முழுதாக எழுதி முடிக்க 2 வருடங்கள் ஆனது. கோவிடை கடந்து இது முழுதாக உருவாக ஆரம்பித்த தருணத்தில், ஆர்யா சார் ஓகே சொ ன்ன பிறகு இந்த சீரிஸ் உண்மையிலேயே மிகப்பெரியதாகிவிட்டது. பொதுவாக ஹாரர் சீ ரிஸ் இங்கு யாரும் பார்த்திருக்க மாட்டீர்கள். அந்த வகையில் இது உங்களுக்கு கண்டிப் பாக மிகப் புதுமையான அனுபவமாக இருக்கும். படக்குழு அனைவரும் கடினமாக உழை த்துள்ளார்கள். அனைவருக்கும் நன்றி.

தயாரிப்பாளர் B.S. ராதாகிருஷ்ணன் பேசியதாவது…
மிக்க மகிழ்ச்சி, நான்கு வருடங்கள் முன்பு மிலிந்த் சார் இதைப்பண்ணலாம் என்றார். அப் போது ஆரம்பித்த பயணம் அபர்ணா மேடம் சொன்னது போல், இந்தக்கதை எழுதவே 2 வ ருடம் ஆனது. வேறு வேறு இடத்தில் நடக்கும் பல கதைகள், அதை ஒன்றிணைக்கும் மைய ப்புள்ளி எது, எப்படி என்பது தான் சுவாரஸ்யம். ஆர்யா சார் வந்த பிறகு தான் இது பெரிய படைப்பாக மாறியது. இந்த படைப்பை பொறுத்தவரை, மிலிந்த் மற்றும் எங்களின் பார் வையும், கதையின் மீதான நம்பிக்கையும் தான் இதில் நடிக்க காரணம் என்றார் ஆர்யா, அவருக்கு நன்றி. அமேசான் யூஎஸ் போலவே இங்கேயும், அவர்கள் முழுமையான ஈடுபா ட்டோடு, உழைத்தார்கள். பெரும் ஆதரவு தந்தார்கள். எல்லோருக்கும் நன்றி.

இயக்குநர் மிலிந்த் ராவ் பேசியதாவது…
இது தமிழுக்கு மிகவும் புதிது. கிராஃபிக் நாவலை இங்கு யாரும் திரைப்படைப்பாக செய் ததில்லை. ஆர்யா சாருக்கும் மிகப்புதியது. இதை அவர் செய்ய ஒத்துக்கொண்டது பெரிய விசயம். கிராஃபிக் நாவலை தமிழ்நாட்டில், தூத்துக்குடி அருகில் நடக்கும் கதை போல நம க்கு நெருக்கமாக, நம் மொழியில் உருவாக்கியுள்ளோம். முழுக்க நைட் கால் ஷீட் தான் அத னால் எல்லோரும் ரொம்ப கஷ்டபட்டு உழைத்தனர். நடிகர்கள் அனைவருக்கும் மிகப் பெ ரிய நன்றி. இசை இந்த சீரிஸிற்கு மிக முக்கியம் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் அட் டாகா ச மான இசையை தந்துள்ளார். விஷுவலும் நன்றாக வந்துள்ளது ஒளிப்பதிவாளருக்கு நன் றி. தொழில் நுட்பக்குழு மிகப்பெரிய உழைப்பை தந்துள்ளார்கள் அனைவருக்கும் நன்றி.

நடிகர் ஆர்யா பேசியதாவது…
அபர்ணா மேடம் இல்லாமல் அமேசான் ப்ரைமில் எந்த புராஜக்டும் ஓகே ஆகாது. அவர் இ தை ஓகே செய்திருக்கிறார் அதுவே பெரிய விசயம். இங்கு நிறைய ஒரிஜினல்ஸ் வர அவர் தான் காரணம் அவருக்கு நன்றி. மிலிந்த் இந்தக்கதையை சொன்ன போது, இதை எடுக்க முடியுமா ? என்று தான் முதலில் கேட்டேன். அவர் எழுதியது மிகப்பெரிய விஷிவல், படத் தை விட பெரிய பட்ஜெட், இதை எல்லாம் இங்கு எடுக்க முடியுமா?, சொல்வதில் 80 சதவீதம் எடுத்தாலே போதும் என்று சொன்னேன். இவ்வளவு பெரிய பட்ஜெட்டை ப்ரைமில் ஒகே செ ய்தார்கள், மிலிந்த் சொன்ன மாதிரி எடுத்து விட்டார் அதுவே மகிழ்ச்சி. மிலிந்த் ஈஸியாக எந்த ஒரு காட்சிக்கும் ஒகே சொல்ல மாட்டார், இதை எடுப்பது மிகக்கடினம்.

ப்ராஸ்தடிக் மேக்கப், ஷீட்டிங் லோகேஷன் என எல்லாமே மிக கடினமாக இருந்தது. 3 வருட நீண்ட பய ணம். இதை எடுத்து முடித்ததற்கே மிகப்பெரிய பார்டி வைக்க வேண்டும். அவ் வளவு கஷ் டபட்டிருக்கிறோம். மேலும் இது எனக்கு புது எக்ஸ்பீரியன்சாக இருந்தது. இவ் வளவு கோரி யான ஹாரர் கதை நடித்ததே இல்லை. இது முழுக்க முழுக்க வித்தியாசமான கான்செப்ட், அதை நம்பித்தான் நான் வேலை செய்தேன். நரேன் சார் அவருடன் சேர்ந்து என் குழந்தை யையும், மனைவியையும் தேடுவது தான் கதை. ஆனால் நிறைய சப் பிளாட் இருக்கும். ஒவ் வொரு எபிஸோடும் நீங்கள் அடுத்து என்ன என்று எதிர்பார்ப்பீர்கள். இந்த மாதிரி கதையி ல் விஷுவல் மற்றும் சவுண்ட் ரொம்ப முக்கியம், அதை மிலிந்த் கொண்டு வந்திருக்கிறார் . விஷுவல் எபெஃக்ட்ஸ் எல்லாம் முடித்து, உங்கள் முன் கொண்டு வர இ வ்வளவு காலம் தே வைப்பட்டது. இப்போது பார்க்க மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்க ள் அனைவருக்கும் க ண்டிப்பாக பிடிக்கும் நன்றி.

நடிகை பூஜா ராமசந்திரன் பேசியதாவது..
தமிழில் நீண்ட காலம் கழித்து, நான் திரும்ப வந்திருக்கிறேன், மகிழ்ச்சியாக உள்ளது. என் னை எப்படி மிலிந்த் இந்த பாத்திரத்திற்கு தேர்ந்தெடுத்தார் என்று ஆச்சர்யமாக இருந்தது, இம்மாதிரி பாத்திரம் செய்ய வேண்டும் என்பது கனவு, எனக்கு இந்த பாத்திரம் வந்தது மி கப்பெரிய மகிழ்ச்சி. நான் கர்பமாகும் முன் வாய்ப்பு வந்தது. நிறைய ஆக்சன் காட்சிகளி ல் நடித்தேன் மூன்று மாதத்தில் எடுத்து விடுங்கள் என்று டைரக்டரிடம் கேட்டேன், அவர் செ ய்து தந்தது மகிழ்ச்சி. பொதுவாக நைட் ஷூட் எடுப்பது கஷ்டம் இது அதை விட கஷ்டம் ஆ னால் மிலிந்த் சார் செம்ம கூலாக ஹேண்டில் செய்தார். இந்த சீரிஸில் நானும் பங்கு பெற் றது மகிழ்ச்சி. எல்லோரும் கஷ்டப்பட்டுள்ளார்கள் சீரிஸ் மிகச்சிறப்பாக வந்துள்ளது. அ னைவருக்கும் நன்றி.

நடிகர் ஜெயப்பிரகாஷ் பேசியதாவது..
இந்த சீரிஸில் ரொம்ப ஈஸியாக இருந்து நடித்தது நான் மட்டும் தான். ஏனென்றால் எல்லா வற்றிற்கும் பிள்ளையார் சுழி போடுவது நான் தான், அதை செய்வது அர்ஜூன். இயக்குந ரின் உழைப்பு மிகப்பெரியது. எல்லாவற்றையும் அருமையாக ஒருங்கிணைத்துள்ளார். அ மேசான் எங்கள் எல்லோரையும் மிக நன்றாக பார்த்துக் கொண்டார்கள், நான் எல்லாம் ஏ சி ரூமில் ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் ஷீட் செய்தேன், மற்றவர்கள் காட்டுக்குள் பயங்கர கஷ்டபட்டிருக்கிறார்கள் அதைக்கேட்கும் போது தான் தெரிகிறது. இது தமிழுக்கு மிகப் பெரிய புதுமையான சீரிஸ், உங்களுக்குப் பிடிக்கும்.

நடிகர் அர்ஜூன் சிதம்பரம் பேசியதாவது..
என்னை, நேர்கொண்ட பார்வை, பொன்னியின் செல்வன் போன்ற படங்களில் வேறு ரூப த்தில் பார்த்திருப்பீர்கள், இதில் புதுவிதமாக பார்ப்பீர்கள். இது மிகப் புது அனுபவமாக இ ருந்தது. ஆர்யா கூட ஒரு சீனில் நடித்துள்ளேன் அதிலும் அவர் பின்னிவிட்டார். அது உங்க ள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன், எனக்கு படத்தில் எந்த வித சிரமமும் இல் லை நடக்க கூட தேவையில்லை, வீல் சேரில் இருப்பேன். என்னுடைய கதாபாத்திரம் அப்ப டி தான் அமைந்தது , நான் இந்தப் படத்தில் நன்றாக நடித்தாலும் நடிக்காவிட்டாலும் இயக் குநர் தான் பொறுப்பு, அனைத்தும் அவரைத் தான் போய் சேரும், இந்தத் தொடர் வெளியா வ தற்காக ஆர்வமாக காத்திருக்கிறேன் நன்றி.

நடிகர் ஜான் கொக்கன் பேசியதாவது..,
எல்லோருக்கும் வணக்கம், என் குரு அஜித்குமாருக்கு வணக்கம், இந்த சீரிஸ் எனக்கு புது மை யான அனுபவம். சர்பாட்டா பரமபரை படத்திற்கு பிறகு ஆர்யா கூட மீண்டும் இதில் ந டித்துள்ளேன், இதிலும் சண்டை போட்டிருக்கிறோம். என் பொண்டாட்டி கூட சேர்ந்து நடித் தது மகிழ்ச்சி. இக்கதையில் மியூடண்டாக நடித்தவர்கள் தான் உண்மையான ஹீரோக்க ள். அவர்கள் காஸ்ட்யூமே 20 கிலோவுக்கு மேல் இருக்கும், அதில் ப்ராஸ்தடிக் மேக்கப் வேறு போட்டு நடித்தார்கள். சண்டைக்காட்சிகள் பயங்கரமாக உழைத்து எடுத்துள்ளார்கள். நீங் கள் இதுவரை பார்க்காத புதிய அனுபவமாக இந்த சீரிஸ் இருக்கும் நன்றி.

நடிகர் ஆடுகளம் நரேன் பேசியதாவது…
சீரிஸ் பற்றி எல்லோரும் சொல்லிவிட்டார்கள், நிறைய கஷ்டப்பட்டோம் ஆனால் இப்போ து பார்க்க சந்தோஷமாக இருக்கிறது. நான் இதுவரை நடித்ததில் இது மிகப்புதுசு. இந்தி யாவிற்கே இது புதுசாக இருக்கும் அனைவருக்கும் பிடிக்கும் நாங்கள் அனைவரும் மிகப் பெரிய அளவில் நம்புகிறோம் அனைவருக்கும் நன்றி.

கைதி புகழ் நடிகர் ஜார்ஜ் மரியான் பேசியதாவது
எல்லோருக்கும் நன்றி. எனக்கு வாய்ப்பு தந்த இயக்குநருக்கு நன்றி, இந்த சீரிஸில் கிராம த்தில் இருக்கும் ஒருவராக நடித்துள்ளேன். மிக நல்ல அனுபவம் உடன் நடித்தவர்கள் அ னைவருக்கும் நன்றி எல்லோருக்கும் நன்றி.

நடிகர் தலைவாசல் விஜய் பேசியதாவது,
நான் படப்பிடிப்பிற்கு வந்த முதல் நாளே அதிக நேரம் படப்பிடிப்பு நடந்தது, அப்போதே இ யக்குநர் குறித்து தெரிந்துவிட்டது. நான் சீனில் நன்றாக பேசி நடித்த பிறகு, மீண்டும் சா தா ரணமாக ஒன் மோர் என்று கேட்பார். நான் எனக்கு மட்டும் தான் இப்படி செய்கிறார் எ ன்று தான் நினைத்தேன், ஆனால் அனைத்து நடிகர்களுக்கும் இதே நிலைமைதான், அ னை வருமே பல வருடம் அனுபவம் நிறைந்தவர்கள் ஆனால் அனைவரிடமும் இயக்குநர் ஒன் மோர் கேட்பார். திரையில் தனக்கு எது தேவை என்பதில் தெளிவாக இருந்தார், அதை யாரையும் கோபப்படுத்தாமல், மகிழ்ச்சியாக முகத்தை கொண்டு, எங்களிடம் வேலை வா ங்கிவிடுவார். மிகத்திறமையான இயக்குநர். இந்த சீரிஸ் புதுசாக இருக்கும், உங்கள் அ னை வருக்கும் ஒரு ஆச்சர்யத்தை கொடுக்கும். கண்டிப்பாக உங்களை மகிழ்விக்கும் என் று நம்புகிறேன் நன்றி.

நடிகர் அஸ்வின் குமார் பேசியதாவது
எனக்கு இந்தக்கதாப்பாத்திரம் தந்ததற்கு அமேசான் மற்றும் இயக்குநருக்கு நன்றி. ஆர் யா சாருக்கு மிக்க நன்றி. மிகப்புதுமையான அனுபவம். எல்லோரும் என்னை நன்றாக பா ர்த்துக்கொண்டனர். எல்லோரும் தாங்கள் கஷ்டப்பட்டதை சொன்னார்கள், கஷ்டம் கண் டிப்பாக இருக்கும் ஆனால் இப்போது பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. செம்ம ஆக்சன் காட் சிகள் நடித்துள்ளோம், வலி எல்லாம் பொருட்டே இல்லை, ஒரு பேஷன் இருந்தால் தான் இ தைச் செய்ய முடியும். எல்லோரும் இதில் ஹீரோ தான். எல்லோருக்கும் நன்றி. உங்கள் எ ல்லோருக்கும் பிடிக்கும் நன்றி.

நடிகை கலைராணி பேசியதாவது
என்னோட முதல் வெப் சீரிஸ் அமேசானுக்கும் டைரக்டருக்கும் நன்றி. எல்லோரும் தாங்க ள் கஷ்டப்பட்டதை சொன்னார்கள், நான் எல்லோரையும் விட ஃபர்ஸ்ட்டாக போக வேண்டு ம், லாஸ்ட்டாக வர வேண்டும், மேக்கப் போடவே 2 மணி நேரம் ஆகி விடும். மேக்கப் ஆர்டி ஸ்ட் எல்லோரும் என்னை நன்றாக பார்த்துக்கொண்டார்கள், எப்போதும் அருகிலேயே இ ருப்பார்கள். மிக்கடினமாக உழைத்துள்ளார்கள். இயக்குநர் என்னை நேரில் வந்து பார்த் து, முழுக்கதையும் சொன்னார் அப்போது அவர் இயக்கத்தில் நயன்தாரா படம் வந்திருந்த து, எனக்கு பிடித்த படம், உடனே ஆர்வத்தில் அவரை சந்திந்தேன். எனக்கு கதை பிடித்திரு ந்தது, நான் எப்படி பேச வேண்டும் என்பதில் ஆரம்பித்து எல்லாவற்றையும் சொல்லித் தாந்தார்கள். நான் இதுவரை நடிக்காத பாத்திரம், இப்படி ஒரு சீரிஸ் பார்த்திருக்க மாட் டீ ர்கள் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

நடிகர் கோகுல் பேசியதாவது..
எனக்கு இந்தப்படத்தில் வாய்ப்பு வந்ததற்கு ஆர்யா சார் தான் காரணம் அவருக்கு நன்றி. சந்தோசம். டைரக்டரிடம் பாத்ரூம் கேட்டால், ரெண்டு மணி நேரம் கழித்து போகலாம் என் பார், மேக்கப் போட்டால் கடைசி வரை கலைக்க முடியாது, ரொம்பவும் கஷ்டபட்டு எடுத் து ள்ளோம். ஆனால் சீரிஸ் பார்க்க புதிதாக இருக்கிறது. உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் ந ன்றி.

குழந்தை நட்சத்திரம் ஆழியா பேசியதாவது
ஆர்யா சார் பொண்ணா நடிச்சிருக்கேன் வில்லேஜ் சீரிஸ், செம்ம அட்வென்ச்சாராக இரு க்கும். ஷீட்டிங்கில் தூங்கும்போது ஜோக் சொல்லி எழுப்பி விட்டு விடுவார்கள். ஜாலியாக இருந்தேன் இந்த சீரிஸ் செம்மையாக இருந்தது. உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். ஆர் யா சார் என்னை நன்றாக பார்த்துக்கொண்டார். எல்லோருக்கும் நன்றி.

பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் தமிழ் திகில், ஒரிஜினல் வெப்சீரிஸ் தி வில்லேஜ் சீரிஸு க்கு, கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார், பாடல் வரிகளை மதுரை சொல் ஜர் (சியான் சாஹீர், செந்தில் குமார்), ஐக்கி பெர்ரி, சினேகன், குரு அய்யாதுரை மற்றும் ஷி ல்பா நடராஜன் எழுதியுள்ளனர். முத்து சிற்பி(காளிமுத்து), சிந்துரி விஷால், மதிச்சிய ம் பாலா(ஜி. முருகன்), குரு அய்யாதுரை, மதுரை சோல்ஜர் (சியான், செந்தில் குமார்), ஐக் கி பெர்ரி, கிரிஷ் கோபாலகிருஷ்ணன், டி.பிரதிமா பிள்ளை, ஷில்பா நடராஜன் ஆகியோர் பாடியுள்ளனர்.

ஸ்டுடியோ சக்தி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில், B.S.ராதாகிருஷ்ணன் தயாரித்து ள்ள தி வில்லேஜ் தமிழ் ஒரிஜினல் சீரிஸை இயக்குநர் மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார், தி வி ல்லேஜ் சீரிஸ், அஸ்வின் ஸ்ரீவத்சங்கம், விவேக் ரங்காச்சாரி மற்றும் ஷாமிக் தாஸ்கு ப்தா வின் ஆகியோர் எழுதிய கிராஃபிக் ஹாரர் நாவலிலிருந்து உருவாக்கப்பட்டதாகும். இந்த கிராஃபிக் திகில் நாவல் யாழி ட்ரீம் ஒர்க்ஸ் வெளியீடாக வெளிவந்தது.

தனது குடும்பத்தைக் காப்பாற்றப் போராடும் ஒருவனின் அபாரமான போராட்டக் கதை யைச் சொல்வது தான் தி வில்லேஜ் சீரிஸ். ஸ்டுடியோ சக்தி நிறுவனத்தின் சார்பில், இந்த த் தொடரை B.S. ராதாகிருஷ்ணன் தயாரித்துள்ளார். சீரிஸுக்கான திரைக்கதையை மிலி ந்த் ராவ், தீரஜ் வைத்தி மற்றும் தீப்தி கோவிந்தராஜன் ஆகியோர் எழுதியுள்ளனர். இந்தத் சீரிஸில், பிரபல தமிழ் நடிகர் ஆர்யா, திவ்யா பிள்ளை, ஆழியா, ஆடுகளம் நரேன், ஜார்ஜ் மாயன், பி.என். சன்னி, முத்துக்குமார் கே., கலைராணி எஸ்.எஸ்., ஜான் கொக்கன், பூஜா, வி.ஜெயபிரகாஷ், அர்ஜுன் சிதம்பரம் மற்றும் தலைவாசல் விஜய் ஆகியோருடன் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

தி வில்லேஜ் சீரிஸ் பிரைம் வீடியோவில் நவம்பர் 24 முதல் இந்தியா மற்றும் 240+ நாடுகளி ல், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளுடன், ஆங்கில சப்டைட்டில்களுடன் வெளியாக உள்ளது.