டிரைவர் ஜமுனா’ பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்!

‘டிரைவர் ஜமுனா’ பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்!

ஒரு நல்ல கதை தனக்கான நடிகர்களை தானாக தேர்ந்தெடுத்துக் கொள்ளும் என்பார்கள். அப் படித் தான் ‘டிரைவர் ஜமுனா’ கதை நடிகர்களைத் தேர்வு செய்து படப்பிடிப்பைத் தொ டங்கியுள்ளது படக்குழு. தற்போது தமிழ், தெலுங்கு என தனக்கு வரும் கதாபாத்தி ரங்க ளு க்காக மெனக்கிட்டு, திரையில் உயிரூட்டி வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் பிரதான கதா பாத் திரங்களில் நடித்து வருகிறார்.

‘வத்திக்குச்சி’ படத்தின் இயக்குநர் கின்ஸ்லின் இயக்கவுள்ள இந்தப் படத்தை 18 ரீல்ஸ் நிறுவனத்தின் சார்பாக,பிரபல குழந்தைகள் நல மருத்துவரும், முன்னணி தயாரி ப்பா ளரான  எஸ்.பி.செளத்ரி மிகப் பெரும் பொருட்செலவில், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று மூன்று மொழி களில்  தயாரித்து வருகிறார். இந்தப் படத்தின் கதையைக் கேட்ட ஐஸ் வர் யா ராஜேஷ், உடனடியாக இதில் நடிப்பதற்கு தேதிகள் ஒதுக்கி ப்டப்பிடிப்பைத் தொட ங்கியுள்ளார்.

சென்னையில் கொரோனா வழிமுறைகளைப் பின் பற்றி படப்பூஜை நடத்தி, படப் பி டிப் பை மும்முரமாக தொடங்கி நடத்தி வருகிறது படக்குழு.  தினமும் கொ ரோனா வழிமு றை களை பின்பற்றி படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள். ‘டிரைவர் ஜமுனா’ எனப் பெய ரிட ப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசைய மை த்து வருகிறார்.  கிரைம்  த்ரில்லர் பா ணியில் இந்தப் படம் உருவாகவுள்ளது. இதில் ஐஸ்வர்யா ரா ஜேஷ் கால் டாக்ஸி  டிரை வராக நடிக்கிறார்.

நல் ல தொழில்நுட்பக் கலைஞர்கள் அமைந்துவிட்டால், படத்தின் கதையோட்டத்தை எளி மையாக மக்களுக்கு உணர்த்திவிடுவார்கள். அந்த வரிசையில் படத்தின் ஒளி ப்ப திவா ளராக கோகுல் பினாய், சண்டைக் காட்சிகளை அனல் அரசு, எடிட்டராக ‘அசுரன்’ எடிட்டர் ஆர்.ராமர் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

இன்றைய கால கட்டத்தில் தினசரி  வாழ்க்கையில் கால்  டாக்ஸி டிரைவர்களை  கடந்து போய் வருகிறோம். ஒரு நடுத்தர குடும்பத்து, பெண் கால்  டாக்ஸி  டிரைவரை மையமாக  கொண்ட கிரைம் திரில்லர் கதை என்பதை மட்டும் படக்குழு தெரிவித்து உள்ளதால் படத் திற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.