அரசியலை வியாபாரமாக்குவதும் வியாபாரத்தை அரசியலாக்குவதும் இந்த ஒரு நிகழ்வோடு நிறுத்தி விடுவீராக!

அரசியலை வியாபாரமாக்குவதும் வியாபாரத்தை அரசியலாக்குவதும் இந்த ஒரு நிகழ் வோடு நிறுத்தி விடுவீராக!

ஓ என் பாசத்திற்குரியீர் !

அரசியலை வியாபாரமாக்குவதும் வியாபாரத்தை அரசியலாக்குவதும் இந்த ஒரு நிகழ் வோடு நிறுத்தி விடுவீராக! யாரும் தனிமனிதரல்ல இந்த தரணியிலே, அப்படி தனித்த னி யா குரல் கொடுப்பதினாலேயே இன்று நாம் தனித்தனி தீவுகளாக மிதந்து கொண்டிரு க் கிறோம். ஒன்றுகூடி தீர்க்க வேண்டியவைகளின் பட்டியல் நீண்டு கிடக்கிறது. கூட்டாக உ ருவாக்கப்படும் திரைப்பட ஊடகத்தில் தனியொரு நபரின் கருத்துக்களாக வெளிவரு வ தில்லை. சமயத்தில் சொந்தக் கருத்துக்களையும் ஒதுக்கி வைத்து படம் சொல்கின்ற கரு த்தினை சொல்ல வேண்டியிருக்கிறது.

நம் வரலாற்றில் சோகமும் வலியுமாய் அடங்கி கிடக்கிறது. ஒவ்வொரு கலைக்கும் ஊடக த்திற்கும் அதனதற்கான சமு தா யப் பொறு ப்பு கள் இருக்க செய்கின்றன. தம்பி சூர்யா அ வ ருக்குக் கொடுத்த பொறுப்பினை செவ்வனே  செய்யத்தா ன் முற்பட்டிருக்கிறார். வேறு உ ட் காரணங்கள் இருப்பதாக வர்ணம் பூசி, போதுமான அளவிற்கு அறுத்து ஆயப்பட்டு வி ட்டது. சிலர் மனம் புண்பட்ட அந்த பிம்பம்கள் படத்தினின்று எடுத்தெறியப்பட்டு விட்டதா க வும் அறிகிறேன்.

இந்தச்சூழலில் இதற்கான, விலை பேச முற்படுவது வேத னை . எதிர்காலம் குறித்த கவலை யையும், அச்சத்தையும் கொ ண்டு சேர்க்கிறது. சம்பந்தபட்டவர்கள் இத்தோடு இத னை மு டிவுக்கு கொண்டு வருவது பொது சமூகத்திற்கு ந ன்று. மேற் சொன்னதுபோல் ஒன்றுகூடி ஆற்ற வேண்டிய கடமைகளும், எடுக்கப்பட வேண்டிய தீர்வுகளும் எண்ணிலடங்கா சிதறி க்கிடக்கின்றன. வன்மமின்றி அன்பால் அதைப் பொறுக்கிச்சேர்ப்போம், புதியதோர் உல கஞ்செய்வோம்.
நன்றி!

– நாசர்,

நடிகர்.
நடிகர், நடிகைகள் சமூகம் சார்பாக.
16.11.2021